Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாவ்னா-அஜீத்.. பிலிம்பேர்
ஹைதராபாத்தில் நடந்த 54வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் அஜீத் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
பிலிம்பேர் பத்திரிக்கையின் சார்பில் வழங்கப்பட்டு வரும் திரைப்பட விருதுகள் இந்திய திரையுலகினர் மத்தியில் கெளரவமாக நினைக்கப்படுகிறது.54வது பிலிம்பேர் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சிறந்த நடிகராக அஜீத், நடிகையாக பாவனா, இயக்குநராக வசந்த பாலன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
சிறந்த படமாக வெயில் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த பாடகராக கானா உலகநாதனும், பாடகியாக ஷ்ரியா கோஷலும் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறந்த சப்போர்ட்டிங் நடிகராக பசுபதியும், சிறந்த சப்போர்ட்டிங் நடிகையாக சரண்யாவும் விருது வென்றனர். பாடலாசிரியர் விருது நா.முத்துக்குமாருக்குக் கிடைத்தது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பாடகி பி.சுசீலாவுக்கும், தெலுங்கு நடிகர் கிருஷ்ணராஜுவுக்கும் வழங்கப்பட்டது. லெஜன்ட் விருதினை சிரஞ்சீவியும், மம்முட்டியும் பெற்றனர்.
விருது வழங்கும் விழா ஹைடெக் மாநாட்டு அரங்கில் மிக கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் விஜய், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மம்முட்டி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, தபு, நயனதாரா, ரம்யா கிருஷ்ணன், பாவனா, சந்தியா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், சித்ரா, பி.சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகர் தீபக் மற்றும் நடிகை அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
விருது வழங்கும் நிகழ்ச்சியின் இடை இடையே கண்கவர் ஆட்டம், பாட்டங்களும் இடம் பெற்றன.
காம்னா ஜெட்மலானி, சிம்ரன், கனிஹா, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் தமிழ், மலையாளப் படங்களுக்கு ஆடிப் பாடினர்.