Don't Miss!
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- News நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா?
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வங்காள நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு தாதா சாகேப் பால்கே விருது!
சத்யஜித்ரேயின் முதல்படம் தொடங்கி அவர் இயக்கத்தில் தொடர்ந்து 14-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சௌமித்ரா சட்டர்ஜி.
இவர் கடந்த 1935 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதியன்று பிறந்தார். இவரது முதல் படம் சத்யஜித்ரேயின் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த 'அபர் சன்சார்' ஆகும். பிரெஞ்ச் அரசால் வழங்கப்படும் உயரிய விருதான 'ஆபீசியர் டீ ஆர்ட்ஸ் இ மேடிஎர்ஸ்' (Officier des Arts et Metiers) என்ற விருதைப் பெற்றுள்ளார்.
சத்யஜித்ரே தவிர, புகழ்பெற்ற இயக்குநர்கள் மிருணாள் சென், தபன் சின்ஹா போன்றவர்களுடன் பணியாற்றியுள்ளார் சௌமித்ரா சாட்டர்ஜி.
2008-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
விருதுகள் விஷயத்தில் சௌமித்ரா சாட்டர்ஜி பெரும் சர்ச்சைக்காரராக அரசுக்குத் திகழ்ந்தார் என்றால் மிகையல்ல.
கடந்த 1970 ஆம் ஆண்டில் இவருக்கு அரசு 'பத்ம ஸ்ரீ' விருதை அறிவித்தது. ஆனால் அதை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அதேபோல, தேசிய விருது தேர்வுக் குழுவின் தேர்வு முறையைக் கண்டித்து 2001-ம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் ஜூரி விருதை புறக்கணித்தார்.
ஆனால் பின்னர் 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 'பத்ம பூஷன்' விருதை பெற்றுக்கொண்டார். அதேபோல, 2008-ல் சிறந்த நடிகர் விருதினையும் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாதா சாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை எனப் புகழப்படுகிறார். இந்தியாவுக்கு சினிமாவை அறிமுகப்படுத்திய அவர் 19 ஆண்டுகாலம் இந்திய சினிமாவை வளர்த்தெடுத்தவர் என்பதால், 1969 ஆண்டு முதல் இந்த உயர்ந்த விருதினை அவர் பெயரில் வழங்குகிறது இந்திய அரசு.