Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது!
மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புரையோடிப்போய் கிடக்கும் மது கலாசாரத்துக்கு எதிராக கவிஞர் கபிலன் வைரமுத்து, 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' எனும் தனிப்பாடலை இயற்றினார். இந்த பாடலை பாலமுரளி பாலு இசையில் டி.ராஜேந்தர் பாடினார். இது நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த பாடலை இயற்றியதற்காக கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரும் டிவிஎம் சேவா பாலம் இந்த விருதை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை அந்த அமைப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில், கபிலன் வைரமுத்து, எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
[ ஆண்ட்ரியாவின் காதல் கனவு நனவானது... 'ஹானஸ்ட்லி' பாடல் சொல்லும் செய்தி! ]
எழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள். இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி, மனித நேயர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.