Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இன்னும் திரைக்கு வராத, ஆனால் விருதுகளைக் குவிக்கும் டுலெட்!
Recommended Video
சென்னை: இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதினைப் பெற்றிருக்கிறது டுலெட்.
இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் செழியன். கல்லூரி, பரதேசி, ஜோக்கர் என முக்கியப் படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன்.
டுலெட் படத்தில் ஷீலா, சந்தோஷ், தருண் என புதியவர்கள்தான் நடித்துள்ளனர்.
"டூலெட்' என்ற வார்த்தை, சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கக்கூடிய நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியது. 2007ல் மென்பொருள் நிறுவனங்கள் பெருவாரியாக நுழைந்தபோது இந்த நகரம் வீடு சார்ந்த ஒரு பிரச்சனையச் எதிர்கொண்டதன் சாட்சியாக நானும் இருந்தேன். அதைப் பதிவு செய்து பார்க்கலாம் என்றுதான் இந்தப்படத்தை எடுத்தோம். ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த டுலெட் என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படம்," என இந்தப் படம் குறித்து முன்பொரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் செழியன்.
இன்னமும் திரைக்கு வராத இந்தப் படம் திரையிடப்பட்ட விழாக்கள் அனைத்திலும் நிறைய விருதுகளைக் குவித்திருக்கிறது. இப்போது தேசிய விருதையும் வென்றுவிட்டது.