சசிகபூருக்கு தாதாசாஹேப் விருது.... அருண் ஜேட்லி மும்பை சென்று வழங்கினார்!
மும்பை: மும்பையில் நடைபெற்ற விழாவில் பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதாசாஹேப் பால்கே விருதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று வழங்கினார்.

நடிகரும், தயாரிப்பாளருமான சசி கபூருக்கு இன்று தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மே 3ம் தேதி இதுதொடர்பான விழா டெல்லியில் நடந்தது. அப்போது பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் சசி கபூருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரால் வர முடியவில்லை. இதனால் அவருக்கு பால்கே விருதை தர முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மும்பைக்கு சென்று இவ்விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று மும்பையில் உள்ள பிரித்வி திரையரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சசி கபூரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சசி கபூரிடம் தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தார்.


Click it and Unblock the Notifications











