கரீனாவுக்கு ஸ்மிதா பாட்டீல் விருது
இந்தி நடிகை கரீனா கபூருக்கு இந்த ஆண்டுக்கான ஸ்மிதா பாட்டில் நினைவு விருது வழங்கப்படவுள்ளது.
பிரியதர்ஷின் அகாடமி என்ற அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு துறையிலும் சிறந்துவிளங்கும் நபர்களுக்கு இந்த விருதை வழங்கி கெளரவித்து வருகிறது.இந்த ஆண்டுக்கான விருதுக்கு கரீனா தேர்வாகியுள்ளார். இந்தி சினிமாவில் கரீனாவின் பங்கை பாராட்டி இந்தவிருது வழங்கப்படுகிறது. மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் இந்த விருதைவழங்குவார்.
இதற்கு முன் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ஓ.என்.ஜி.சி. நிர்வாக இயக்குனர் சுபிர் சாகா,மும்பையின் பிரபல இருதயவியல் நிபுணர் கோயல், பொருளாதார நிபுணர் பேராசிரியர் அரிந்தம் செளத்திரி,இந்தோனேஷிய பொருளாதார சீர்திருத்தக் குழுவின் தலைவர் தில்லான் உள்ளிட்டவர்கள் இந்த விருதைப்பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











