Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
இசைஞானிக்கு என்டிஆர் விருது
இசைஞானி இளையராஜாவுக்கு, ஆந்திர மாநில அரசு வழங்கும் சிறந்த சாதனை படைத்தோருக்கான என்.டி.ஆர். விருது கிடைத்துள்ளது.
ஆந்திர மாநில அரசு சிறந்த திரை சாதனையாளர்ளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த விருது கடந்த 2002ம் ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டது. நிதிப் பற்றாக்குறைதான் இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து என்.டிஆர். விருதினை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து தற்போது மீண்டும் இந்த விருது வழங்கப்படவுள்ளது. இதற்காக 3 பேர் கொண்ட கமிட்டி அறிவிக்கப்பட்டது. இந்த கமிட்டி கடந்த 2003, 2004 மற்றும் 2005ம் ஆண்டுக்கான விருது பெறுவோரைத் தேர்வு செய்துள்ளது.
பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவுக்கு 2003ம் ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது. இவர் 333 படங்களில் ஹீரோவாக நடித்து (இன்னும் கூட நடித்து வருகிறார்) சாதனை படைத்தவர்.
2004ம் ஆண்டுக்கான விருதினை நமது இசைஞானி இளையராஜா பெறுகிறார். கன்னட நடிகர் அம்பரீஷுக்கு 2005ம் ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது.
இன்னொரு திரைப்பட விருதான நந்தி விருதுகள் வழங்கப்படும் நிகழ்ச்சியின்போது என்.டி.ஆர். விருதும் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான நந்தி விருதை நம்ம ஊர் திரிஷா பெற்றிருக்கிறார் என்பது தெரியும்தானே!