Don't Miss!
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அமெரிக்கர்களின் மனங்கவர்ந்த முதல் தெற்காசிய நடிகை... பிரியங்கா சோப்ரா!
லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் 'பீப்பிள் சாய்ஸ் 2016' விருதைக் கைப்பற்றியதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் தெற்காசிய நடிகை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா 'குவாண்டிகோ' என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் கடந்த ஆண்டு முதல் நடித்து வருகிறார்.
இந்தத் தொடரின் மூலம் பெரும் புகழையும், பெருமையையும் பெற்ற பிரியங்கா சோப்ரா தற்போது இன்னொரு பெருமைக்கும் சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.
அதாவது பீப்பிள் சாய்ஸ் 2016 என்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகை(தொலைக்காட்சி) என்ற விருதையும் இவர் வென்றிருக்கிறார்.
இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் தெற்காசிய நடிகை என்ற பெருமையும் பிரியங்காவிற்கு கிடைத்திருக்கிறது. இந்த விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா பேசும்போது " எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
இந்தியாவில் இருந்து வந்து ஒரு அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் நான் நடிப்பது இதுவே முதல்முறை. நான் நினைக்கிறேன் அமெரிக்க மக்கள் எல்லாவற்றைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கின்றனர்.
எனது அம்மா, மேனேஜர், குவாண்டிகோ படக்குழுவினர், எழுத்தாளர் மற்றும் ஏபிசி பால் லீ ஆகிய அனைவருக்கும் நான் அளவுக்கு அதிகமாக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
பிரியங்கா சோப்ராவின் குவாண்டிகோ தொடர் சுமார் 42க்கும் அதிகமான நாடுகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்க்களமாக அமைந்ததில் பிரியங்கா சோப்ரா ஹேப்பி அண்ணாச்சி!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!