விருதுகள்
சென்னை:
நடிகர் சிவகுமாருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. எத்தனை மனிதர்கள் என்ற டிவி தொடரில் நடித்தது தொடர்பாக அவருக்கு இந்த விருதுவழங்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் அகாடமி இந்த விருதை அவருக்கு வழங்கியது. சிறந்த தொலைக்காட்சித் தொடர்கள், அதில் நடித்த நடிகர்கள், நாடகக் கலைஞர்கள்,சபாக்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இப்படிக்குத் தென்றல் தொலைக்காட்சித் தொடருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகைக்கான விருது மெளனிகாவுக்குகிடைத்தது.
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், எழுத்தாளர் சிவசங்கரி, அபஸ்வரம் ராம்ஜி, நடிகை காந்திமதி உள்பட பலருக்கு விருது வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











