சினிமாக்காரர்களுக்கு தமிழக அரசு கொடுத்த 'சோப்பு டப்பா'தான் விருதுகளா?
2009 முதல் 2013 வரையிலான தமிழக அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டதில் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. மீதமிருக்கும் 2014, 2015, 2016 ஆண்டுகளுக்கும் சேர்த்து அறிவித்திருந்தால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே ஆளுக்கொரு விருது வாங்கியிருக்குமே என்ற ரீதியில் விமர்சனங்கள் வருகின்றன.
ஆனால் விருதுகளை அறிவித்ததே பிதாமகன் படத்தில் சூர்யா ஆறுதல் பரிசாக சோப்பு டப்பா பரிசளிப்பாரே அது போன்ற ஒரு விஷயம் தான் என்று சிரிக்கின்றனர்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தியேட்டர் டிக்கெட் விலை அதிகரித்தது. எனவே வரியை நீக்க சொல்லி போராடினார்கள் தியேட்டர் அதிபர்கள். தியேட்டர்கள் மூடப்பட்டன. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தியேட்டர்களை திறந்தனர். ஆனால் வரியை குறைத்துக்கொள்வதாக அரசு எந்தவித உத்தரவாதமும் தரவில்லையாம். அதை ஈடுகட்டதான் இந்த விருது அறிவிப்பாம்.
அப்ப டிக்கெட் ரேட்டு குறைய வாய்ப்பே இல்லையா?


Click it and Unblock the Notifications











