Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது!
இசை உலகின் உயரிய கிராமி விருதினை இந்தியாவைச் சேர்ந்த ரிக்கி கெஜ், நீல வாஸ்வாணி ஆகியோர் வென்றுள்ளார்.
57வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.
இதில் நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் 'வைன்ட்ஸ் ஆப் சம்சாரா' ஆல்பத்திற்காக ரிக்கி கெஜ்-க்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ரிக்கி கெஜ், பெங்களுருவைச் சேர்ந்தவர். இவர் தென்னாப்பிரிக்காவின் இசைக் கலைஞர் வவுட்டர் கெல்லர்மேனுடன் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கியிருந்தார்.
ஐ அம் மலாலா என்ற குழந்தைகள் ஆல்பத்திற்காக நீல வாஸ்வானி கிராமி விருது வென்றுள்ளார். ஒரு பெண் குழந்தை எப்படி கல்விக்காக குரல் கொடுத்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பதைச் சொல்லும் ஆல்பம் இது. இதனை குரல் பதிவாகவும் தந்துள்ளார் வாஸ்வாணி.
பண்டிட் ரவிஷங்கரின் மகள் அனோஷ்காவின் ட்ரேசஸ் ஆப் யு ஆல்பம், பெஸ்ட் வேல்ட் மியூசிக் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விருது பெறத் தவறிவிட்டது.