Don't Miss!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பாகுபலி நடிகை மீது 200 கோடி ரூபாய் மோசடி புகார்… 7 மணி நேரம் விசாரணை… கலக்கத்தில் பாலிவுட்
டெல்லி: சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழிலதிபரை மிரட்டி 200 கோடி மோசடி செய்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி டெல்லி போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாகுபலி படத்தில் இடம்பெற்ற 'மனோகரி' என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி.
அதிரவைத்த 200 கோடி மோசடி
பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் புயலைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். மேலும், சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்திருந்தது.
விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள்
200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெயரும் அடிபட்டது, இந்தி திரையுலகையே அதிரவைத்தது. இந்நிலையில், தொழிலதிபரிடம் இருந்து மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது. இதனால், 200 கோடி ரூபாய் மோசடி வழக்கு இன்னும் சூடு பிடித்தது.
நோரா ஃபதேஹிக்கும் தொடர்பு?
இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹிக்கும் இந்த மோசடி வழக்கில் தொடர்புவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று தொடர்ச்சியாக 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், 2-வது நாளாக மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.
சுகேஷ் சந்திரசேகரை தெரியாது
நோரா ஃபதேஹிக்கும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் பின்னணி எனக்குத் தெரியாது என நோரா ஃபதேஹி கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தான் பல நிகழ்ச்சிகளில் என்னுடன் வந்து பேசியதாகவும் நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார். பல மணி நேரமாக நடைபெற்ற விசாரணையில் அவரிடம் 50க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அடுத்தடுத்து பாலிவுட் நடிகைகள் சிக்கிவருவது, இந்தித் திரையுலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோரா ஃபதேஹி 'பாகுபலி' படத்தில் இடம்பெற்ற 'மனோகரி' பாடல் மூலம் பிரபலமானவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.