பாலியல் வழக்கில் கைதான நடிகர் கமல் ரஷீத் கான்..போலீசார் தீவிர விசாரணை!

மும்பை : பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி கமல் ரஷீத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து இருந்தார்.

அதில் ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இறந்துவிடக் கூடாது. இப்போது தான் ஒயின் ஷாப்கள் விரைவில் திறக்கப்படவிருக்கின்றன என்று பதிவிட்டிருந்தார். அதேபோல் இர்ஃபான் கான் பற்றியும் சர்ச்சைக் கருத்தை பதிவிட்டு இருந்தார்.

பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான்

பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான்

இதையடுத்து, ஏப்ரல் 29 ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானும், அடுத்த 24 மணி நேரத்தில் ஏப்ரல் 30ந்தேதி பிரபல மூத்த நடிகர் ரிஷி கபூர் உயிரிழந்தனர். பாலிவுட்டின் இரண்டு ஜாம்பவான்கள் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழக்க, இரு கலைஞர்களையும் அவர்களின் மறைவை ஒட்டி தரக்குறைவாக விமர்சித்ததற்காக யுவ சேனா அமைப்பு கமல் ரஷீத் கான் மீது புகார் அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் கைது

விமான நிலையத்தில் கைது

அந்தப் புகாரின் காமல் ரஷீத் கான் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கமல் ரஷீத் கான் துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். இதனை அறிந்த மும்பை போலீசார் கமல் ரஷீத் கானை மும்பை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

பாலியல் வழக்கு

பாலியல் வழக்கு

இந்நிலையில், கமல் ரஷீத் கான் தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில், செப்டம்பர் 3 ஆம் தேதி வெர்சோவா போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அந்த பெண் தனது புகாரில் கானை நான் ஒரு பார்ட்டியில் சந்தித்தேன். அப்போது அவர் தனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதியளித்தார். அப்போது நான் என் தொலைபேசி எண்ணை அவருக்கு கொடுத்தேன் அப்போது அவர் தனக்கு வெளிப்படையான பாலியல் செய்திகளை அனுப்பினார்.

வீட்டில் அத்துமீறினார்

வீட்டில் அத்துமீறினார்

இதையடுத்து, ஜனவரி 2019 இல், கான் தனது பிறந்தநாள் விழாவிற்கு கலந்து கொள்ள என்னை அழைத்தார். ஆனால், நான் போகவில்லை. இதையடுத்து, அவர் அழைத்ததின் பேரில் அவரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றேன். அப்போது கான் மேல் தளத்திற்கு அழைத்து சென்று மதுபானம் கொடுத்தார்.ஆனால், அதை மறுத்து, ஆரஞ்சு சாறு சாப்பிட்டேன். இதையடுத்து, அவருக்கு போதை அதிகமாகி தகாத முறையில் என்னிடம் நடந்து கொண்டார் என புகார் அளித்துள்ளார்.

பல பிரிவுகளின் கீழ் வழக்கு

பல பிரிவுகளின் கீழ் வழக்கு

வெர்சோவா காவல்துறை கான் மீது IPC பிரிவு 354 (A) மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தது, ஆனால், கமல் அப்போது வெளிநாடு சென்றிருந்ததால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசார் நீதிமன்றத்தில் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X