Don't Miss!
- Sports பக்கத்தில் வந்து தோற்றுவிட்டோம்! இதயம் முற்றிலும் நொறுங்கிவிட்டது..பஞ்சாப் கேப்டன் சாம் கரண் கருத்து
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதற்கு முன்பு வரை, ஃபிளாப் நடிகர் என்றே முத்திரைக் குத்தி இருந்தார்கள்.. பிரபல நடிகர் வருத்தம்!
மும்பை: அந்த தொடருக்கு முன் வரை, என்னை பிளாப் நடிகர் என்றே கூறிவந்தார்கள் என்று பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகர் முகேஷ் கண்ணா. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடித்து புகழ்பெற்றவர் இவர்.
இந்தியில் முஜே கசம் ஹே, ரூஹி, கேப்டன் பார்ரி, சுகந்த, மேரி ஆன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
ஒண்ணும் புரியலையே.. ஒரே குழப்பமா இருக்கே.. இந்த பிகினி போஸில் பிரியங்கா சோப்ரா என்ன சொல்ல வராங்க?
சூப்பர் ஹீரோ
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'சக்திமான்' தொடர் மூலம் இன்னும் பிரபலமானார். சூப்பர் ஹீரோ, ஆக்ஷன் காமெடி தொடரான இது, குழந்தைகளுக்குப் பிடித்த தொடராக வெளியான காலகட்டத்தில் இருந்தது. அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடராகவும் இது அமைந்தது. இதையடுத்து அதிக பிரபலம் அடைந்தார், முகேஷ் கண்ணா.
மகாபாரதம்
கொரோனா லாக்டவுன் காரணமாக, தூா்தா்ஷனில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத் தொடா்களை மீண்டும் ஒளிபரப்பினர். இந்த தொடா்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. 1988 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில், நிதிஷ் பரத்வாஜ் கிருஷ்ணராகவும் முகேஷ் கண்ணா பீஷ்மராக நடித்திருந்தனர். பி.ஆர்.சோப்ரா இயக்கி தயாரித்திருந்தார்.
பிளாப் நடிகர்
இவர், 'மகாபாரத'த் தொடருக்கு முன் தன்னை ஃபிளாப் நடிகர் என்றே முத்திரை குத்தினார்கள் என்று இப்போது தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'அந்த தொடருக்கு முன் நான் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தன. இதனால் அதிக ஏமாற்றமடைந்தேன். மக்கள், என்னை ஃபிளாப் நடிகர் என்றே முத்திரை குத்தி இருந்தார்கள்.
விரும்பவில்லை
ரயிலில் பயணம் செய்யும் போது, ரசிகர்கள் அடையாளம் கண்டு, 'நீங்க முகேஷ் கண்ணாதானே' என்று கேட்டால், நான் அவர் தம்பி என்று சொல்லிவிடுவேன். நான் மக்களை எதிர்கொள்ள விரும்பவில்லை. ஆனால், மகாபாரதத் தொடருக்குப் பின்னால் நிலைமை மாறிவிட்டது. எனது கேரக்டருக்காக மக்கள் என்னை ரசிக்கத் தொடங்கினார்கள்.
ரஹி மசூம் ராஸா
இந்த தொடருக்காக எனக்கு கிடைத்த புகழின் பெரும்பகுதியை, இந்த தொடருக்கு வசனம் எழுதிய டாக்டர் ரஹி மசூம் ராஸாவுக்கு வழங்குகிறேன். எனது கேரக்டருக்கு அவரது பேனா தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தது. அதனால்தான் பீஷ்மர் கேரக்டர், என்னை பலரது வீட்டில் ஒருவனாக மாற்றியது' என்று தெரிவித்துள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!