சும்மா பொய் சொல்லாதீங்க அக்கா.. நடிகை ஷில்பா ஷெட்டியை வெளுத்து வாங்கிய ஷெர்லின் சோப்ரா!
மும்பை: கணவர் ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரம் குறித்து எதுவுமே தெரியாது என ஷில்பா ஷெட்டி கூறிய நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா அவரை வெளுத்து வாங்கி உள்ளார்.
ஆபாச பட விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.
ஆனால், அந்த விவகாரம் பற்றி தனக்கு தெரியாது என்றும் தான் தனது வேலைகளில் பிசியாக இருந்தேன் என்றும் நடிகை ஷில்பா ஷெட்டி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆபாச ஆப்
பாலிவுட் கவர்ச்சி நடிகைகள் மற்றும் மாடலிங்கில் ஈடுபட்டு வரும் இளம் பெண்களுக்கு பட வாய்ப்புகள் தருவதாக கூறி ஆபாச படங்களில் நடிக்க வைத்து அந்த ஆபாச வீடியோக்களை ஹாட்ஷாட் எனும் ஆப்பில் ஏற்றி வெளிநாடுகளுக்கு வியாபாரம் செய்து மோசடி செய்ததாக தயாரிப்பாளர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சப்போர்ட்
கணவர் கைதான நிலையில், அவர் எடுத்தது எதுவும் ஆபாச படங்கள் இல்லை என்றும் அவை எரோடிகா எனும் காமப் படங்கள் தான் எனவும் வாதாடி வந்த நடிகை ஷில்பா ஷெட்டி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கணவர் தயாரித்த ஆபாச படங்கள் பற்றி தனக்கு தெரியாது என ஒரே அடியாக மறுத்து விட்டார்.

பொய் சொல்லாதீங்க அக்கா
ராஜ் குந்த்ராவின் ஆபாச படங்களில் நடித்துள்ள ஆபாச பட நடிகை ஷெர்லின் சோப்ரா கணவர் செய்யும் தொழில் எதுவுமே தனக்கு தெரியாது என சொல்வது நம்பும்படியாக இல்லை அக்கா.. ரொம்ப பொய் சொல்லாதீங்க என வெளுத்து வாங்கி வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையையும் பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

ஷில்பா ஷெட்டிக்கு தெரியும்
இப்படி நடிகை ஷெர்லின் சோப்ரா பேசியதை பார்த்த நெட்டிசன்கள் எல்லாமே ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்து தான் நடந்திருக்கும் என்றும் அவரையும் விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உண்மை வெளியாகும் என்றும் கூறி வருகின்றனர். முன்னதாக நடிகை கெஹானா வசிஸ்த் மற்றும் ஷெர்லின் சோப்ரா உள்ளிட்டோர் ஆபாச பட நடிகைகளின் வீடியோவை ஷில்பா ஷெட்டி லைக் செய்துள்ளார் என்கிற தகவலையும் தெரிவித்து இருந்தனர்.

விவாகரத்து முடிவு
இந்த விவகாரத்தில் தான் சிக்காமல் இருக்க கணவர் ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்யும் முடிவுக்கே நடிகை ஷில்பா ஷெட்டி வந்துள்ளதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜ் குந்த்ராவின் தொழில் பார்ட்னரான சவுராப் குஷ்வாகா உள்ளிட்டோரும் ஆபாச படங்களுக்காகத் தான் ராஜ் குந்த்ரா அந்த செயலியை உருவாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், தப்ப முடியாத சூழலில் சிக்கித் தவித்து வருகிறார் ராஜ் குந்த்ரா.


Click it and Unblock the Notifications











