Don't Miss!
- Finance அய்யயோ.. பெங்களூரில் நடப்பது அப்படியே டெல்லியில் நடக்குதே..?!
- Automobiles மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
- News ஓட்டு மெஷினில் தில்லு முல்லு இல்லையெனில், 180 பாஜக தொகுதியில் சுருங்கிவிடும்! பிரிங்கா காந்தி ஆருடம்
- Lifestyle சூடான நீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..?
- Sports கேப்டன் ரோஹித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
இன்ஸ்டாகிராமில் மனைவிக்கு கொலை மிரட்டல்..பிரபல நடிகையின் கணவர் போலீசில் புகார்!
மும்பை : பிரபல நட்சத்திர தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கேத்ரீனா கைஃப். இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் 2003ஆம் ஆண்டு வெளியான 'பூம்' படத்தின் மூலம் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார். தொடர்ந்து ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகப் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
5 மொழிகள்..2500 தியேட்டர்கள்..தட்டி தூக்க போகும் “தி லெஜண்ட்“..மாஸ் என்ட்ரினா இதுதான்!
இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான விக்கி கவுஷலை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பஞ்சாபி முறைப்படி விக்கி கவுஷல் - கேத்ரீனா கைஃப் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது. இவர்களது திருமணத்தில பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில், பாலிவுட் நட்சத்திரங்களான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் தம்பதியினருக்கு சமூக ஊடகங்களில் மர்ம நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் விக்கி கௌஷல் புகார் அளித்துள்ளார். நடிகர் விக்கி கவுஷல் அளித்த புகாரில்,மர்ம நபர் தனது மனைவியைப் பின்தொடர்ந்து பல நாட்களாக இன்ஸ்டாகிராமில் மிரட்டி வருவதாக புகார் கூறியுள்ளார்.
நடிகர் விக்கி கௌஷலின் புகாரின் அடிப்படையில், சான்டாக்ரூஸ் போலீசார் அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் மீது ஐபிசியின் பிரிவுகள் 506(2),354(டி) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மும்பை சாந்தாகுரூஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வரும் கத்ரினா தற்போது கை வசம் மெர்ரி கிறிஸ்துமஸ், டைகர் 3, போன் பூட் ஆகிய படங்களை வைத்துள்ளார். அதேபோன்று, அவரது கணவர் விக்கி கெளசல், கோவிந்தா நாம் மேரா, ரெளலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.