"கிசு கிசு" கார்னர்
காதல் இல்லை... இல்லவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார் சார்மி. ஆனால், டைரக்டர் கண்மணியின்வீட்டில் அடிக்கடி பார்க்க முடிகிறது இந்தப் பெண்மணியை.
ஆஹா எத்தனை அழகு படத்தில் நடித்தபோது சார்மிக்கும் டைரக்டர் கண்மணிக்கும் பத்திக் கொண்டது காதல்நெருப்பு. அதே போல படத்தின் தயாரிப்பாளருக்கும் இன்னொரு ஹீரோயின் பாவ்னாவுக்கும் இன்னொரு பக்கம்நெருக்கு பத்திக் கொள்ள ஆஹா.. எத்தனை அழகு படப் பிடிப்புத் தளமே ஒரே கொஞ்சலும் குலாவலுமாகத் தான்இருந்தது.
இந் நிலையில் படப்பிடிப்பு முடிந்தது. அத்தோடு இந்தக் காதலும் முடிந்தது என்று எல்லோரும் நினைத்திருக்கசார்மியும் கண்மணியும் தங்களை காதலைத் தொடர்ந்து கொண்டுள்ளனர். இந் நிலையில் அடிக்கடி டைகர்டர்கண்மணியின் சாலிக்கிராமம் வீட்டில் ஆஜராகிவிடுகிறார் சார்மி என்கிறார்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்.
அதே நேரத்தில் பாவ்னாவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையியே காதல் ஏதும் இல்லையாம். அது வேறஒன்றாம். இப்போதும் பெங்களூரில் இருந்து அடிக்கடி பறந்து போய் சென்னையில் தயாரிப்பாளரை மீட்செய்கிறாராம் பாவ்னா. அதே போல வேறு தயாரிப்பாளர்களையும் நேரில் போய் சந்தித்து சான்ஸ் கேட்டுவிட்டுஊருக்குப் போகிறார்.


Click it and Unblock the Notifications











