சம்பளத்தை இரு மடங்காக்கிய சர்ச்சை நடிகை!
தனது சம்பளத்தை இரண்டு மடங்காக்கி தமிழ் சினிமாவுக்கே அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறார் சர்ச்சை நடிகை.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்கும் சர்ச்சை நடிகை தனது சம்பளமாக இதுவரை மூன்று கோடிகளை வாங்கி வந்தார். வரிசையாக படங்கள் கமிட் ஆகும் நிலையில் திடீரென அதை ஏழு கோடியாக்கி விட்டாராம்.

மும்பையில் இருந்து வந்திருக்கும் கம்பெனி இந்த சம்பளத்துக்கு ஓகேவும் சொல்லியிருக்கிறதாம். கறுப்புக்கண்ணாடி இயக்குநரின் சிஷ்யர் ஒருவர் இயக்கும் படத்துக்கு தான் இந்த சம்பளம்.
இப்படியெல்லாம் சில கார்ப்பரேட் கம்பெனிகள் ஏற்றிவிடுவதால் தான் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று தமிழ் சினிமாவில் புலம்பல்கள் கேட்கிறது.
Comments


Click it and Unblock the Notifications