Don't Miss!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குலதெய்வத்தை கும்பிட வராத காரணம் தெரியுமா?
சூரிய தொலைக்காட்சியில் மங்களகரமான வாத்தியத்தின் பெயர் கொண்ட சீரியலை 5 ஆண்டுகள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் அந்த தெய்வானை நாயக இயக்குநர். அந்த சீரியல் முடிந்த பின்னர் தற்போது புதிய சீரியலை இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினும், அப்பாவும் தவிர பெரும்பாலோனோர் புதுமுகங்கள்தான்.
சீரியலில் இயக்குநரே ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நடிக்கவில்லை. வேறொருவர் நடிக்கிறார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இயக்குநருக்கு பெரிய திரை வாய்ப்பு கிடைத்துள்ளதாம். ஏற்கனவே பெரியதிரையில் சில படங்களை இயக்கியவர்தான் இவர். அங்கு செட் ஆகவில்லை என்பதால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார்.
மங்களகரமான சீரியலுக்கு கிடைத்த வரவேற்பினால் பெரிய திரை வாய்ப்பு கிடைத்துள்ளதாம். எனவே குடும்பப்பாங்கான சினிமா எடுக்க ஸ்கிரிப்ட் தயார் செய்து வருகிறாராம். அதனால்தான் புதிய சீரியலில் நடிக்காமல் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறாராம். தன்னுடைய படத்தில் நடிக்க புதுமுகங்களை தேர்வு செய்வதோடு பிரபலமாக உள்ள இளவட்ட நாயகர்களிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம்.