ரசிகர்கள் பயந்த மாதிரியே நடந்துவிட்டது
திருவனந்தபுரம்: மலையாள ரசிகர்கள் எதை நினைத்து பயந்தார்களோ அது நடந்துவிட்டது.
விவாகரத்தான பிரபல மலையாள நடிகை ஒருவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான பிரபல நடிகரை அண்மையில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு நடிகையை பார்க்கவே முடியவில்லை.

விருது விழாக்கள் உள்ளிட்ட எந்த பொது நிகழ்ச்சிகளுக்கும் வருவது இல்லை. புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவும் இல்லை. அந்த நடிகர் தனது முதல் மனைவியையும் திருமணத்திற்கு பிறகு நடிக்க விடாமல் வீட்டோடு முடக்கினார்.
தற்போது இவருக்கும் அதே கதி தான் ஏற்படுமோ என்று ரசிகர்கள் அஞ்சினர். இந்நிலையில் நடிகர் தனது மூத்த தாரத்து மகளுடன் பிரபல இயக்குனர் வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தார். இரண்டாவது மனைவியை அழைத்து வரவில்லை.
அந்த நடிகரை திருமணம் செய்தாலே இது தான் நிலை என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications