Don't Miss!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிக்கலில் "தொட்டி ஜெயா"
சிம்புவின் வம்பினால் நொந்து போய் தொட்டி ஜெயா படத்தை டிராப் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
வித்தியாசமான கெட்டப்பில் சிம்புவும், கோபிகாவும் நடிக்க தொட்டி ஜெயா படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.ஆனால் இப்போது தொட்டி ஜெயா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நொந்து போயுள்ளார்.
காரணம், சிம்புவின் சில வம்புகள்தான். சிம்புவின் கதை, வசனத்தில் உருவாகி வரும் படம் மன்மதன். இந்தப் படத்தை சிம்புதான் வேறுபெயரில் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். எனவே மன்மதன் வரும்போது வேறு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம்என சிம்பு நினைத்துள்ளார். இதனால் தொட்டி ஜெயா படத்தை தீபாவளிக்குப் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் இதை தொட்டி ஜெயா குழு ஏற்க மறுத்து விட்டது. ஆனாலும் தனது முடிவில் சிம்பு உறுதியாக இருந்துள்ளார். இதனால்கொல்கத்தாவில் ஒரு ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் தொட்டி ஜெயா பாதியில் நிற்கிறது.
படத்தை இப்படியே விட்டு விடலாமா அல்லது சிம்புவுக்காக காத்திருப்பதா என்று பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளார் கலைப்புலிதாணு.
தீபாவளிக்குப் பிறகு சிம்புவின் கால்ஷீட் கிடைத்தாலும் கோபிகாவின் கால்ஷீட் கிடைக்காது என்பதுதான் தாணுவின் கவலை.
காரணம் கோபிகாவிற்கு கை நிறைய படங்கள் இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ஹீரோயின் கோபிகாதான்.
ஒரு படத்தில் ஹீரோ ஸ்ரீகாந்த். படத்தை இயக்குவது ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த்.
மற்றொரு படத்தில் ஹீரோ தனுஷ். இதுதவிர சேரனின் ட்ரீம்ஸ் தியேட்டர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக கோபிகாநடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குவது சேரன் அல்ல.
ஆட்டோகிராஃப் படத்தில் கேரள போர்ஷன்களை ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன்தான் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.இந்தத் தமிழ்ப்படங்கள் தவிர்த்து, 3 மலையாளப் படங்கள் மற்றும் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க கோபிகா ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையெல்லாம் பார்த்துத்தான் தொட்டி ஜெயா படம் வருவது குறித்த சந்தேகம் திரையுலகில் கிளம்பியுள்ளது. அதற்கு ஆமாம் போடுவதுபோல், கலைப்புலி தாணுவும் விஜய் நடிப்பில் சச்சின் படத்திற்கு பூஜை போட்டுள்ளார்.