மது முதல் மாதுவரை.. அந்த சீனியர் நடிகர் இப்போ சைலெண்ட்.. அப்போ என்ன கூத்து அடிச்சாரு தெரியுமா?

By Staff

சென்னை: கோலிவுட்டில் கடந்த பல வருடங்களாக உச்சத்தில் இருப்பவர் அந்த நடிகர். அவரது இடத்தை இப்போதுவரை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சாந்த சொரூபியாக இருக்கும் அவர் இள வயதில் இல்லாத கூத்துக்களை எல்லாம் அடித்து தீர்த்தவர். இந்த சூழலில் அதுகுறித்து கோலிவுட்டில் பேச்சுக்கள் மீண்டும் கிளம்பியிருக்கின்றன.

இந்திய அளவில் படு ஃபேமஸான நடிகர் அவர். ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்த அவர் தனது திறமையின் துணையோடு படிப்படியாக முன்னேறியவர். அவர் சந்திக்காத அவமானங்கள் இல்லை, கஷ்டங்கள் இல்லை. ஆனாலும் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்பதில் தீராத தாகம் கொண்டு கிடைத்த வாய்ப்புகள் எதையும் உதாசீனப்படுத்தாமல் உண்மையாக உழைத்தார். பலன் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்.

இப்போதும் அப்படித்தான்: பொதுவாக ஒருவர் முன்னேறி உயரத்துக்கு சென்றுவிட்டால் உழைப்பதில் சலிப்பு காட்ட தொடங்கிவிடுவார்கள். ஆனால் இவர் அப்படி இல்லை. இவ்வளவு உயரந்த பிறகும் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போல் உழைக்கிறார். தன்னுடன் பணியாற்றுபவர்களை எந்த தருணத்திலும் அசிங்கப்படுத்தியதே இல்லை. அவரது குணத்தை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியம்தான் படுகிறது.

Gossip about Top Kollywood Star s Hidden Past Alcohol Affairs and a Surprising Transformation

அப்போ அவர் ஆடிய ஆட்டம்: அதிலும் இப்போது ரொம்பவே அமைதியாக இருக்கிறார். ஆனால் தன்னுடைய இள வயதில் அவர் செய்யாத சேட்டைகளே இல்லை. அதில் முதன்மையானது மது. நடிகருக்கு ஆறு மணி ஆகிவிட்டால் தலைக்குள் டிங் என்று பாட்டில் சத்தம் கேட்டுவிடும். அதனால் மாலைக்கு மேல் இந்த வண்டி ஓடாது என்று ஷூட்டிங் போகும்போதே சொல்லிவிடுவார். குடித்துவிட்டு அமைதியாகவும் இருக்கமாட்டாராம்.

மாதுதான் எல்லாமே: அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு மாதுக்களை தேடி போவதையும், அடிதடி சண்டை செய்வதையும் தின வாடிக்கையாக வைத்திருந்தாராம். முக்கியமாக ரொம்பவே பிரபலமாக இருந்த ஒரு கவர்ச்சி நடிகையை பல வருடங்கள் தனது கட்டுப்பாட்டில்தான் எடுத்திருந்தாராம். எப்போது எங்கே கூப்பிட்டாலும் அந்த நடிகை ஆஜர் ஆக வேண்டுமாம். இதனால் அம்மணி ரொம்பவே கஷ்டப்பட்டாராம். ஒருவழியாக இன்னொரு நடிகை மீது நடிகரின் கண்கள் செல்ல இவர் விடுதலை ஆனாராம்.

பிரச்னையில் சிக்கிய நடிகர்: கவர்ச்சி நடிகையை விட்டுவிட்டு நடிகரின் ஆசை அப்போதைய பான் இந்தியா நடிகை மீதும் சென்றது. முதலில் நடிகரின் வலையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த நடிகையிடம், எடைக்கு எடை தங்கம் கொடுப்பது போல் பணத்தை அள்ளி வீசினாராம். பணம் பத்தும் செய்யும் என்பதற்கேற்ப போல் நடிகரின் வலைக்குள் நடிகையும் வந்துவிட்டாராம். படுக்கைக்கு மட்டுமே நடிகையை பயன்படுத்தி வந்த நடிகர்; ஒரு நிலைமையில் திருமணம் செய்துகொள்ளும் முடிவெடுத்தாராம்.

நழுவிய நடிகை: ஆனால் நடிகைக்கு துளியும் அதில் விருப்பமில்லையாம். எப்போது வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். ஆனால் திருமணம் என்ற பேச்சோடு என்னிடம் நெருங்கக்கூடாது என்று கண்டிஷன் போட; வந்தவரை லாபம் என்று நினைத்து நடிகரும் சம்மதித்தாராம். இவரது கட்டுப்பாடற்ற செயல்களை பார்த்த குடும்பத்தினர் கால்கட்டு போட முடிவு செய்து வற்புறுத்தி இன்னொரு பெண்ணுடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்து சம்மதிக்க வைத்தார்களாம். திருமணத்துக்கு பிறகும் நடிகர் தனது லீலைகளை குறைத்துக்கொள்ளவே இல்லை.

அப்படிப்பட்ட சமயத்தில்தான் குழந்தைகள் பிறந்தன. இனியும் இப்படியே சென்றுகொண்டிருந்தால் ஒன்று மரணம் இல்லை ஃபீல்டு அவுட் என்பதை உணர்ந்திருக்கிறார். மேலும் அடக்கி வாசித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக சேட்டைகளை குறைத்து ஒரு நல்ல குடும்பஸ்தனாக மாறினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X