Don't Miss!
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீராவின் கோப முடிவு!!
தமிழ் பத்திரிக்கையாளர்களைப் பார்த்தாலே எரிந்து விழுகிறார் மீரா ஜாஸ்மின். தமிழ் சினிமாக்காரர்கள் மீதும் கடுங் கோபமாம் அம்மணிக்கு.
வேண்டுமென்ற தன்னைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்புகிறார்கள் என்பதுதான் சேச்சியின் இந்த கோபத்திற்கு காரணம்.தெலுங்கிலும், மலையாளத்திலும் மீராவுக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் நேபாளி படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு கொஞ்ச நாளைக்கு தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தன் கோபத்தை வெளிப்படுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
இதனால்தான் சம்பளம் குறைவு என்றாலும் கூட சில கன்னடப் படங்களைக் கூட ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
இப்படித்தான் நயன்தாராவும் சிம்பு பிரச்னையில் தமிழுக்கு டாட்டா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அப்புறம் வம்படியாக நயனை தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள் சிம்புவுக்கு எதிர் முகாமிலிருப்பவர்கள்.
மீராவும் தமிழை ஒதுக்கும் முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்ட நேரத்தில் இப்படியொரு விபரீத கோபம் தேவையா? என அவரது தோழிகள் அட்வைஸ் செய்யத் தொடங்கியிருக்கிறார்களாம்.
சரியான நேரத்தில், பொருத்தமான அட்வைஸ்தான்!