அந்த அளவுக்கு ரீச் ஆகலையே... கலக்கத்தில் புது சேனல்!
பெரிய பெரிய திட்டங்களுடனும் எதிர்பார்ப்புகளுடனும் ஒளிபரப்பைத் தொடங்கிய சேனல் டார்கெட்டை அச்சீவ் செய்யாததால் கலக்கத்தில் இருக்கிறதாம்.
வட மாநிலங்களில் சக்கைப் போடு போட்ட அந்த சேனல் தமிழில் ஆரவாரமாக களம் இறங்கியது. இறங்கிய வேகத்திலேயே தமிழ் சினிமாவின் ப்ளே பாய் ஒருவரை வைத்து சுயம்வரம் நிகழ்ச்சியை தொடங்கியது. ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக போன நிகழ்ச்சி சமீப நாட்களாக டல்லடிக்கிறதாம்.
இதனால் எதையாவது செய்து டிஆர்பியை ஏற்ற வேண்டுமே என்று சேனலில் சேர்ந்தவர்கள் ஓடுகிறார்களாம். ரிலீஸாகவிருக்கும் படங்களை வாங்குவது, படத் தயாரிப்புக்கு கதை கேட்பது என பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications