தமிழ்நாட்டில் சம்பாதிப்பதை கேரளாவில் முதலீடு செய்யும் 'பிக்கப்'!
தமிழ் சினிமா எப்போதுமே தமிழர், தமிழரல்லாதவர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. இப்போது முன்னணியில் இருக்கும் பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் கிடையாது.
ஆனால் அப்படி தமிழால் வளர்ந்தாலும் அவர்கள் சொந்த மண் மீதுதான் அதிகம் பாசம் வைத்துள்ளார்கள். இங்கே சம்பாதிப்பதை எதிர்காலத்தில் செட்டில் ஆகும் நோக்கத்தோடு சொந்த மாநிலத்தில் தான் முதலீடு செய்கிறார்கள்.
பிக்கப் நடிகருக்கு சொந்த மாநிலம் கேரளா. இங்கே சம்பாதிக்கும் பணத்தை அப்படியே கேரளாவில் தான் சொத்துகளாக மாற்றுகிறாராம். முக்கியமாக, ரியல் எஸ்டேட்டில் தான் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்.
வரிசையாக தோல்விகளை சந்தித்ததோடு சொந்தப் படமும் எடுத்து நஷ்டமானதால் சில காலத்துக்கு தயாரிப்புக்கு தடை போட்டுவிட்ட நடிகர், சொந்த மாநிலத்தில் சக நடிகர்கள் இருவருடன் சேர்ந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். விரைவில் தமிழை விட்டுவிட்டு மலையாளத்திலேயே செட்டில்
ஆகலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











