Just In
- 10 min ago
சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு!
- 1 hr ago
சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்!
- 1 hr ago
சிறுமியுடன் திருமணம்.. லஞ்சம் தந்து போலி ஐடி கார்டு.. சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல பாடகர் கைது!
- 1 hr ago
சிவாஜி ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த காரியம்.. புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்!
Don't Miss!
- Finance
ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!
- Education
வேலை, வேலை, வேலை.! ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை!!
- Lifestyle
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- News
கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா
- Sports
ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Automobiles
மாருதியின் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
"கிசு கிசு" கார்னர்
தனது தாயாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்து வருகிறார் ஷெரீன்.
பெங்களூரில் மாடலிங்கில் இருந்தபோது பட ஆண் மாடல்களுடன் ஷெரீனுக்கு பழக்கம் உண்டு. அதில் பெட்ரோல் பங்க் அதிபரின் மகனான ரோஹன் என்பவரை ஷெரீன் சமீப காலமாக காதலிக்க ஆரம்பித்தார். இதையடுத்து அவரைக் கூட்டிக் கொண்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர ஆரம்பித்தார்.
வாய்ப்புக்கள் குறையவே பெங்களூர் திரும்பினார், சமீபத்தில் ரோஷனுக்கும் ஷெரீனுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது (செய்தியை நாம் அன்றைய தினமே வெளியிட்டோம்).
ஆனால், இந்தத் திருமணத்தில் ஷெரீனின் தாயார் யசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே விருப்பமில்லையாம். நடித்துப் பணம் ஈட்ட வேண்டிய இந்த நேரத்தில் காதல், திருமணம் தேவையில்லை என்பது அவரது வாதமாம். இருந்தாலும் நெருக்குதல் தந்து நிச்சயதார்த்ததை நடத்தினார் ஷெரீன். இதற்கு அவரது தந்தை கூட வரவில்லை. அவர் வளைகுடாவில் பணியாற்றி வருகிறார்.
இந் நிலையில் கடந்த வாரம் கோவையில் நடந்த சத்யராஜின் 25வது திரையுலக ஆண்டு விழாவில் நடிகைகள் ரம்பா, ஷர்மிலி, பூமிகாவுடன் நடனமாட வந்தார் ஷெரீன். கூடவே அவரது தாயாரும் வந்தார்.
நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த அரங்கிற்கு ரோஹனும் வந்து சேர்ந்தார். இதையடுத்து ஷெரீனும் ரோஹனும் தனியே போய் பேச ஆரம்பித்தனர். இதைக் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் யசோதா.
இதையடுத்து பெங்களூர் திரும்பியதும் தாய்- மகள் மோதல் பெரிதானதாகத் தெரிகிறது. ரோஹனுடன் பேசவே யாசோதா தடை போடவே, வீட்டை விட்டே வெளியேறிவிட்டாராம் ஷெரீன்.
அதே நேரத்தில் இப்போதைக்குத் திருமணம் செய்வதில்லை என்ற முடிவில் இருக்கும் ஷெரீன், பட வாய்ப்புக்களை இழக்க விரும்பவில்லை. இதனால், சில நாட்களுக்கு முன் சென்னை வந்து சில சினிமா நிருபர்களை மட்டும் அழைத்து ரோஹனும் நானும் நண்பர்கள் தான். நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை. நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
இப்போது சான்ஸ்களுக்கா காத்திருக்கிறார் ஷெரீன். இனி அவரை கோடம்பாக்கம் திரும்பிப் பார்க்குமா?