Don't Miss!
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
"கிசு கிசு" கார்னர்
தனது தாயாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்து வருகிறார் ஷெரீன்.
பெங்களூரில் மாடலிங்கில் இருந்தபோது பட ஆண் மாடல்களுடன் ஷெரீனுக்கு பழக்கம் உண்டு. அதில் பெட்ரோல் பங்க் அதிபரின் மகனான ரோஹன் என்பவரை ஷெரீன் சமீப காலமாக காதலிக்க ஆரம்பித்தார். இதையடுத்து அவரைக் கூட்டிக் கொண்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர ஆரம்பித்தார்.
வாய்ப்புக்கள் குறையவே பெங்களூர் திரும்பினார், சமீபத்தில் ரோஷனுக்கும் ஷெரீனுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது (செய்தியை நாம் அன்றைய தினமே வெளியிட்டோம்).
ஆனால், இந்தத் திருமணத்தில் ஷெரீனின் தாயார் யசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே விருப்பமில்லையாம். நடித்துப் பணம் ஈட்ட வேண்டிய இந்த நேரத்தில் காதல், திருமணம் தேவையில்லை என்பது அவரது வாதமாம். இருந்தாலும் நெருக்குதல் தந்து நிச்சயதார்த்ததை நடத்தினார் ஷெரீன். இதற்கு அவரது தந்தை கூட வரவில்லை. அவர் வளைகுடாவில் பணியாற்றி வருகிறார்.
இந் நிலையில் கடந்த வாரம் கோவையில் நடந்த சத்யராஜின் 25வது திரையுலக ஆண்டு விழாவில் நடிகைகள் ரம்பா, ஷர்மிலி, பூமிகாவுடன் நடனமாட வந்தார் ஷெரீன். கூடவே அவரது தாயாரும் வந்தார்.
நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த அரங்கிற்கு ரோஹனும் வந்து சேர்ந்தார். இதையடுத்து ஷெரீனும் ரோஹனும் தனியே போய் பேச ஆரம்பித்தனர். இதைக் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் யசோதா.
இதையடுத்து பெங்களூர் திரும்பியதும் தாய்- மகள் மோதல் பெரிதானதாகத் தெரிகிறது. ரோஹனுடன் பேசவே யாசோதா தடை போடவே, வீட்டை விட்டே வெளியேறிவிட்டாராம் ஷெரீன்.
அதே நேரத்தில் இப்போதைக்குத் திருமணம் செய்வதில்லை என்ற முடிவில் இருக்கும் ஷெரீன், பட வாய்ப்புக்களை இழக்க விரும்பவில்லை. இதனால், சில நாட்களுக்கு முன் சென்னை வந்து சில சினிமா நிருபர்களை மட்டும் அழைத்து ரோஹனும் நானும் நண்பர்கள் தான். நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை. நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
இப்போது சான்ஸ்களுக்கா காத்திருக்கிறார் ஷெரீன். இனி அவரை கோடம்பாக்கம் திரும்பிப் பார்க்குமா?