பட வாய்ப்பு இல்லை.. வருமானம் இல்லை.. பெரிய புள்ளிகள் முதல் ரசிகர்கள் வரை கொக்கி போடும் நடிகை.. உஷார்
சென்னை: இந்த நடிகை தென்னிந்திய அளவில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் நன்கு புகழ் பெற்ற நடிகையாக இருக்கிறார். இளம் வயதில் நடிகர்களுடன் செம நெருக்கமான காட்சிகளில் நடித்து மொத்த திரையுலகையும் அசர வைத்தார். இவரது நெருக்கமான காட்சிகளுக்காகவே படத்தை பலமுறை பார்த்த இளசுகளும் உள்ளார்கள். ஓடிடியில் அந்த படம் வெளியான போதும் இந்த படத்தில் நடிகையின் கிளாமரான காட்சிகளுக்காகவே ஏகப்பட்ட கிராக்கி இருந்தது.
நடிகை அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க காரணம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் என நினைத்துதான். ஆனால் பட வாய்ப்புகள் அவர் எதிர்பார்த்த அளவில் வந்தது. இதனால் நடிகை ரொம்பவும் குஷி ஆனார். அதில் பல படங்கள் அவரை கிளாமர் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கும்படி செய்தது. தற்போது நடிகை 30 களைக் கடந்துவிட்டார். இன்னும் காதல் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். இதனால் நடிகை ஒரு முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சப்ஸ்கிரப் ஆப்ஷனைப் பயன்படுத்தி நடிகை பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளாராம். அதாவது, இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை சப்ஸ்கிரைப் செய்ய வைத்து அவர்களில் மாதம் ஒரு நபரிடம் ஆயிரக் கணக்கில் பணம் ஈட்ட திட்டமிட்டுள்ளாராம். அதுவும் பெரிய தலைகள் அதில் இடம் பெற்றால், லம்ப் அமவுண்ட்டை கறந்து விட நடிகை திட்டமிட்டுள்ளாராம்.
பக்கா பிளான்: சும்மா சப்ஸ்கிரைப் ஆப்ஷனை தொடங்கினால் யாரும் சீண்ட மாட்டார்கள். எனவே சில மாதங்களுக்கு ரொம்பவும் கிளாமராகவும், மேலாடை அணியாமலும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறாராம். அவரது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்த பேச்சுக்கள் இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல், பேச்சையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் நடிகை வெகு விரைவில் அந்த சப்ஸ்கிரைப் ஆப்ஷனை ஆன் செய்து பண வேட்டையில் களமிறங்கவுள்ளார். பெரிய தலைகள் தொடங்கி ரசிகர்களே ஜாக்கிரதை என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











