காசு... பணம்... துட்டு... வாகை சூட வழியில்லாமல் தவிக்கும் நடிகை!
சென்னை: தேசிய விருது வாங்கிய படத்தில் அறிமுகமாகியும் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார் இனிமையான நடிகை.
அழகான உடலமைப்பு, திறமையான நடிப்பு என எல்லாம் பெற்றிருந்தும் நடிகைக்கு புதிய படங்கள் ஏதும் வருவதில்லை. நடிகையும் நாயகியாகத் தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல், குணச்சித்திர வேடம், குத்தாட்டம் என இறங்கி வந்து விட்டார்.
ஆனாலும், புதிய படங்கள் எதிலும் அம்மணி ஒப்பந்தமாகவில்லை. என்ன காரணமாக இருக்கும், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறாரா என விசாரித்தால், நடிகைக்கு நெருக்கமானவர்கள் வேறு காரணம் சொல்கிறார்கள்.
அதாகப் பட்டது, எந்த வேடம் என்றாலும் நடிக்க ஓகே சொல்லும் நடிகை, சம்பளம் தான் தாறுமாறாக கேட்கிறாராம். நாயகியின் சம்பளத்தை விட சமயங்களில் ஒரு காட்சிக்கு நடிக்க நடிகை கேட்கும் சம்பளம் அதிகமாக இருக்கிறதாம்.
சம்பள விசயத்திற்குப் பயந்து தான் நடிகைக்கு வாய்ப்புத் தர இயக்குநர்கள் தயங்குகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











