இனி உன் வழி தனி... என் வழி தனி… மகனை கழட்டிவிட்ட அப்பா
தமிழ் சினிமாவின் பன்முக நடிகர் அவர். வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாகி இப்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். அவருடைய மகன் ஹீரோவாக அறிமுகமாகி பத்தாண்டுகள் தாண்டியும் இன்னும் பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு உயராதது அவருக்கு கவலையை கொடுத்திருக்கிறது.

ஒரு நாயை மையமாக வைத்து உருவான படம் மட்டும் முதலுக்கு மோசமில்லாமல் போனது. அதற்கு அடுத்து மகனுக்காக தந்தை கெஸ்ட் வேடம் போட்ட பேய் படமும் சரியாக போகவில்லை.
இதனால் பொறுமை இழந்த அப்பா 'உன்கூட நடிச்சா எனக்கும் பேர் போகுது. இனிமே உன் விஷயத்துல நான் தலையிட மாட்டேன். என்கிட்ட நீயும் உதவி கேட்டு வராதே... மகனே இனி உன் சமர்த்து'' என சொல்லிவிட்டாராம்.
தம்பி அப்பா மாதிரி உயரமா உடம்பை வளர்த்தா மட்டும் போதாது. அப்பா மாதிரியே கரெக்டா கதையை செலக்ட் பண்ணனும்!


Click it and Unblock the Notifications











