நடிகரை மயக்கிப் போட்ட பெண் பிரபலம்.. பாதி சொத்தை இழந்துட்டு புலம்பும் நடிகர்!
சென்னை: இந்த நடிகர் நல்ல நடிகர் என்று பெயர் பெற்றவர். ஆனால் இவர் கடந்த சில ஆண்டுகளாக இவரது நடவடிக்கைகள் ரொம்பவும் அவரது பெயரைக் கெடுத்து விட்டது என்று கூறலாம். அதாவது நடிகர் தனது திருமணத்தை மீறி ஒரு பெண் பிரபலத்துடன் உறவில் இருந்தது, அவரது மனைவிக்கு தெரியவர அவருக்கு மானமே போனது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில் மனைவியைக் கழட்டிவிட்டுடுப் போனவர், இப்போது பாதி சொத்தை இழந்து நிற்கிறாராம்.
அதாவது இந்த நடிகர் தனது இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டார். எந்த வேகத்தில் திருமணம் செய்து கொண்டாரோ, அதே வேகத்தில் குழந்தைகளும் பெற்றுக் கொண்டார். நிம்மதியாக வாழ்ந்து வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாகவே பெண் பிரபலம் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகப் போக, போகப் போக இருவருக்கும் இடையிலான பழக்கம் என்பது ரொம்பவும் வேறு மாதிரி நகர்ந்துள்ளது.

நடிகரின் குடியும் குடித்தனமும்: அந்த பெண் பிரபலமும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதால், தானாகவே வந்து ஒட்டிக் கொண்ட நடிகரை விட மனமில்லாமல் தனது கட்டுப் பாட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்துள்ளார். அதன் விளைவாக நடிகர் அவரது மனைவியை மொத்தமாகவே குழந்தைகளுடன் விட்டுவிட்டு அந்த பெண் பிரபலத்துடன் குடியும் குடித்தனமுமாக இருந்துவிட்டார். அந்த பெண் பிரபலத்திற்கு சுமார் பல கோடிகள் செலவில் கோவாவில் பெரிய பங்களா எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
பாதி சொத்து காலி: இப்படி இருக்கும்போது, நடிகர், அந்த பெண் பிரபலம் என்ன கேட்டாலும் 'நோ' சொல்லாமல், மறுப்பு சொல்லாமல் எல்லாவற்றையும் செய்து வருகிறாராம். இதனால் நடிகரின் பாதி சொத்து இப்போதே காலி ஆகிவிட்டதாம். இதை வெளியில் சொல்ல முடியாமல், நடிகர் புலம்பி வருகிறாராம். நடிகரின் இந்த நடவடிக்கைகளால் அவர்களது பெற்றோர்கள் மிகவும் கவலையில் இருக்கிறார்களாம். அவர்களும் எவ்வளவோ அட்வைஸ் செய்தும் நடிகர் எதையும் கண்டு கொள்ளாமல், அந்த பிரபலத்துடன் எப்போதும் போல குடியும் குடித்தனமுமாக இருக்கிறாராம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் நடிகருக்கு என்றைக்குத்தான் புத்தி வருமோ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











