மடியில் தூக்கி வெச்சு கொஞ்சிய நடிகையை கழட்டி விட்டுட்டு! பிரபலம் எடுத்த முடிவு முடிவு
சென்னை: இந்த நடிகை பக்கத்து மாநிலத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர். சினிமாதான் கனவு, இலக்கு, லட்சியம் என்று வந்தவருக்கு சின்னத்திரையில் தான் இடம் கிடைத்தது. நடிகைக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. காமெடி கதாபாத்திரத்தில் ஜொலிக்க வேண்டும் என்பது மட்டும் தான்.
இப்படி இருக்கையில் நடிகை இங்கு வந்த பின்னர் ஒரு பிரபலத்தின் அறிமுகம் கிடைக்க, சினிமா கனவை கொஞ்சம் கிடப்பில் போட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், அந்த பிரபலத்துடன் மிகவும் நெருங்கிப் பழகவும் ஆரம்பித்துள்ளார். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியதில் நடிகைக்கு அந்த பிரபலமே கெதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த பிரபலமோ நடிகையுடன் தனது ஆசைக்கு பழகி வருகிறார் என்று நடிகைக்குத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நடிகையுடன் அவர் மிகவும் க்ளோசாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வேகமாக பரவியது. அதனை ஏ.ஐ. என்று கூட சொல்லி தப்பிக்க முடியாத சூழல், காரணம் இருவரும் நெருக்கமாக தான் இருந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள் என்பதை நம்பவைப்பதற்கு பல அம்சங்கள் அதில் இருந்தது.

மடியில் தூக்கி வைத்து: நடிகை அந்த பிரபலத்தை தூக்கி தனது மடியிலேயே உட்கார வைத்து புகைப்படம் எடுத்திருந்தார். இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவ, இருவரும் காதலிக்கிறார்கள் என்ற யூகத்தை கிளப்பியது. ஆனால் இப்போது என்னவென்றால் நடிகையை அவர் ஒப்புக்குச் சப்பாணி ஆகத்தான் ட்ரீட் செய்துள்ளாராம். இப்போது தனது உறவினர்கள் வழியிலேயே நன்றாக பல்க்காக சொத்து மதிப்பு உள்ள ஒரு பெண் கிடைத்ததும், அவரை ஓட்டிக் கொண்டு உள்ளாராம்.
ஏமார்ந்த நடிகை: இதனால் ஏமார்ந்த நடிகை, கொஞ்சம் குடி, போதை என இறங்கிவிட்டாராம். இது எல்லாம் போதாது என்று அந்த பிரபலமும் தனது சொந்தக்கார பெண்ணுடன் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து, இந்த நடிகையை வெறுப்பேற்றி வருகிறாராம். இந்த நடிகையோ தனது நெருங்கிய வட்டத்தில் அந்த பிரபலத்தின் மானத்தை வாங்கி விட திட்டம் போட்டு வருகிறாராம். இது மட்டும் இல்லாமல் பிரபலம் ஏமாற்றியதால் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











