Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எடுத்ததும் வரலை, என்ன செய்யன்னும் தெரியல... அதிரடியாக அப்படியொரு முடிவை எடுத்த பிரபலம்!
சென்னை: எடுத்தப் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாததால், அதிரடியாக அடுத்த முடிவை எடுத்திருக்கிறார், காதல் கொண்ட இயக்குனர்.
அந்த இயக்குனர் ஆரம்பத்தில் எடுத்த லவ் படங்கள் எல்லாம் ஹிட். அட, வித்தியாசமா காதலை சொல்றாரே என்று அவர் மீது அதிக நம்பிக்கை.
அப்படியே தனது பிரதரையும் ஹீரோவாக வளர்த்தார். இருவரும் இணைந்த படங்களுக்கு அத்தனை வரவேற்பு.
எல்லாத்துக்கும் காரணம் அவங்கதான்.. செம ரகளை செய்ய வராங்க பல்லு படாம பாத்துக்க படக்குழு!
டைம் சரியில்லை
அவர் சாண்டல் காமெடியை, ஹீரோவை நடிக்க வைத்து படம் ஒன்றை இயக்கி இருந்தார். இதை சிலருடன் இணைந்து அவரே தயாரித்திருந்தார். படம் முடிந்து இரண்டு வருடமாகியும் ஃபைனான்ஸ் சிக்கலில் இருக்கிறது. அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுவதற்காக எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை என்கிறார்கள்.
இரண்டு ஹீரோயின்கள்
அடுத்து அந்த இன்ஷியல் இயக்குனர் நடித்த பேய் படத்தை இயக்கினார். அதில் இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அந்தப் படம் முடிந்தும் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், பல்வேறு சிக்கல்களால் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கிடையே, வம்பு நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்து இயக்கப் போவாதாக அறிவித்த படம் தொடங்கப்படவே இல்லை.
அதிரடி முடிவு
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த இயக்குனர், அதிரடியாக ஒரு முடிவெடுத்தார். அது, தம்பியுடன் மீண்டும் இணைவது என்பதுதான். ஒரு கதையை ரெடி பண்ணிவிட்டு, மீண்டும் தம்பிக்கே போன் அடிக்க, அண்ணனின் நிலைமை கண்டு உடனே சம்மதம் தெரிவித்து இருக்கிறார், தம்பி.
ஏகப்பட்ட வரவேற்பு
இந்த அண்ணன் -தம்பி காம்பினேஷனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்க, இதையடுத்து சமூக வலைத்தளத்தில் தனது அடுத்தப்படம் பற்றி அறிவித்திருக்கிறார் இயக்கம். இது அவர் இயக்கிய முந்தைய படத்தின் அடுத்தப் பாகமாக இருக்கலாம் என்கிறார்கள். அந்தப் பேட்டை படத்தின் 2 ஆம் பாகம் என்கிறார்கள். ஆனால், அது காதல் கதை என்கிறது ஒரு தரப்பு.