மகன்களை பார்...மகளுக்கு அட்வைஸ் கொடுத்த உச்ச நட்சத்திரம்

By Staff

சென்னை : அந்த பிரபலத்தின் வீட்டில் நடந்த விவாகரத்து விவகாரம் முடியாமல் தொடர் கதையாகி வருகிறது. விவாகரத்தை அறிவித்த பிறகு வீட்டில் பல குழப்பங்கள் நடந்து வருகிறதாம். எந்த பக்கம் போவது என தெரியாமல் சிக்கி தவித்து வருகிறார்களாம்.

உச்ச நட்சத்திரம் பலமுறை எச்சரித்தும், அட்வைஸ் செய்தும் கேட்காமல் பிடிவாதமாக ஒரே முடிவாக விவாகரத்தை அறிவித்து விட்டார் மகள். இதனால் செம டென்ஷனான உச்ச நட்சத்திரம் வீட்டில் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தாராம். அப்பாவை எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் மகளும், வேலை வேலை என ஓடிக் கொண்டிருந்தார்.

நான் ரொம்ப பிஸி

நான் ரொம்ப பிஸி

விவாகரத்தை அறிவித்த பிறகு வேலையில் பிஸியாக இருப்பதாக காட்டிக் கொண்டு சோஷியல் மீடியா பக்கமே தலை வைத்து பார்க்காமல் இருந்த உச்ச நட்சத்திரத்தின் மகள், திடீரென தொடர்ந்து போஸ்ட் போட துவங்கினார். இவர் போடும் பல போஸ்ட்கள் உள்குத்தோடு தான் இருந்தன. இதனால் யாருக்கு இதை சொல்கிறார் என சந்தேகங்களும் எழுந்தன. ஆரம்பத்தில் வேலை தொடர்பாகவே போஸ்ட் போட்டு வந்தவர், தற்போது தனிப்பட்ட வாழ்க்கையில் தான் செய்வது பற்றி அதிகம் போஸ்ட் போட்டு வருகிறார்.

எல்லாம் இதுக்கு தானா

எல்லாம் இதுக்கு தானா

இதனால் எதற்காக இவர் இப்படியெல்லாம் போஸ்ட் போடுகிறார். யாருக்கு ,என்ன மெசேஜ் சொல்ல வருகிறார் என அனைவரும் கேள்வி கேட்டனர். ரசிகர்கள் சிலர் ஆறுதலும் கூறினர். அவர் மன அழுத்தத்தில் உள்ளார். கணவரை பிரிந்த துக்கத்தை மறைப்பதற்காகவும், தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாக காட்டி கொள்வதற்கும் தான் இந்த போஸ்ட் போடுகிறார் என பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் உண்மை அது இல்லையாம். அப்பா உச்ச நட்சத்திரத்தை சில் பண்ண தான் இந்த போஸ்ட் எல்லாமுமாம்.

இவ்வளவு நடந்திருக்கா

இவ்வளவு நடந்திருக்கா

சமீபத்தில் தந்தையை சந்தித்து விட்டு வந்த பேரன்களிடம், வழக்கம் போல் விசாரித்துள்ளார் உச்ச நட்சத்திரம். அவர்களோ அப்பாவுடன் இருப்பது தான் ஜாலியாக இருக்கிறது என சொல்லி உள்ளனர். இதை கேட்டு ஷாக்கான உச்ச நட்சத்திரம், மனைவியை கூப்பிட்டு ரைடு விட்டுள்ளார். குடும்பம் தான் ஃபர்ஸ்ட். மற்றதெல்லாம் அப்புறம் தான் என கண்டிப்பாக சொல்லி உள்ளார். பதறி அடித்து மகளுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உள்ளார் தாய்குலம். வேலைகளை பாதியிலேயே போட்டு விட்டு, மகன்ளுடன் போட்டோ எடுத்து உருக்கமாக சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு விட்டார்.

அதுக்கு தானா இது

அதுக்கு தானா இது

நான் வேலையில் பிஸியாக இல்லை. என்னை கவனித்து கொள்கிறேன். நான் சந்தோஷமாக இருக்கிறேன். புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சி என பிரயோஜனமாக தான் பொழுதை கழிக்கிறேன் என தந்தைகுலத்தை நம்ப வைத்து, அவரின் கோபத்தில் இருந்து எஸ்கேப் ஆக தான் தான் காபி குடித்தால் கூட அதை சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டு விடுகிறாராம்.

பதற்றத்தில் போடும் போஸ்டா

பதற்றத்தில் போடும் போஸ்டா

தந்தைகுலத்தின் அட்வைசை கேட்டு கணவருடன் சேர்ந்து வாழும் முடிவுக்கு வந்து இருந்தாராம் மகள். ஆனால் கணவர் பிடிவாதமாக நோ சொல்லி விட்டாராம். இதையே தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தவருக்கு அடுத்த ஷாக்காக, தற்போது மகன்களும் அப்பாவுடன் தான் இருக்க விரும்புவதாக கூறுவதால் பதற்றத்தில் தனது துக்கத்தை மறைக்க போஸ்டாக போட்டு தள்ளுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X