இது சின்னத்திரை திரைமறைவுகள்... கம்முன்னு படிங்க!...

By Mayura Akilan

20க்கும் மேற்பட்ட சேனல்களில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் கேம் ஷோக்கள் என கலந்து கட்டி அடிக்கின்றன டிவி சேனல்கள். இதில் மக்கள் எந்த சேனல்களை ரசிக்கிறார்கள் என்பதை டி.ஆர்.பிக்கள் காட்டிக்கொடுகின்றன. இந்த சேனல்களில் நடிக்கும் நட்சத்திரங்களைப் பற்றி சின்னச் சின்ன திரைமறைவு ரகசியங்களை உங்களுக்கு அளிக்கும் பகுதிதான் கம்முன்னு படிங்க... படிச்சு என்ஜாய் பண்ணுங்க வாசகர்களே.

பிரகாஷூ நிஜமாப்பா

சூர்ய டிவியில் இரவு 8 மணி ஆகிவிட்டாலே பிரகாஷை பார்க்க இல்லத்தரசிகளுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. அந்த அளவிற்கு நல்ல பிள்ளையாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வருகிறார் பிரகாஷ். இந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் பெரிய திரையில் தீவிரமாக வாய்ப்பு தேடி வருகிறாராம் பிரகாச நடிகர். ஏற்கனவே சினிமாவில் நடித்த போது ஹீரோயினாக நடித்த மன்மதராச நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சின்னத்திரையில் பிரபலமாக நடித்தாலும் மீண்டும் பெரிய திரை பக்கம் கவனம் செலுத்தி வருகிறராம் பிரகாச நடிகர்.


நடனமாட ஆர்வம் காட்டும் ரம்மியம்...

சின்னத்திரை தொகுப்பாளியான ரம்மியம் நடனம், நடிப்பு என்று ஆர்வம் காட்டாமல் இருந்தார். திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ள அவர் தற்போது நடனத்திலும் ஆர்வம் காட்டி வருகிறாம். நட்சத்திர தொலைக்காட்சியின் நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஆடிய அவருக்கு நடனத்தின் மீது கவனம் திரும்பியுள்ளதாம்.

12 ஆண்டுகளாக முறைப்படி நடனம் கற்றவராம் ரம்மியம். சின்னத்திரை தொகுப்பாளினியான பின்னர் நடனத்தை கைவிட்டிருந்த அவருக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கவே அதை வகையாக பயன்படுத்திக் கொண்டாராம்.

சந்தோசத்தில் சித்தியும், மாமியாரும்

சின்னத்திரை நட்சத்திரங்கள் டப்பிங் சீரியல்களுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கவே ஒரே ஒரு சேனல் மட்டும் தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல்களை படிப்படியாக குறைக்க முடிவு செய்துள்ளதாம்.

ஆனால் டி.ஆர்.பியில் பரபரப்பாக இருக்கும் அந்த சி.ஐ.டி தொடரை மட்டும் நிறுத்தமாட்டோம் என்று கூறிவிட்டதாம். ஏதோ இந்த மட்டிலாவது நிறுத்த ஒப்புக்கொண்டார்களே என்று சந்தோசப்படுகிறார்களாம் சித்தியும், மாமியார் நடிகையும்.

தமிழுக்கு வந்த அக்கட தேச தொகுப்பாளினி

அக்கட தேசத்தில் இருந்தும் அவ்விட தேசத்தில் இருந்தும் நடிகைகள்தான் சீரியலுக்கு வந்தனர். இப்போது புதிய முயற்சியாக அக்கட தேசத்து தொகுப்பாளினிகளை களமிறக்குகிறது பாலிவுட்டை தலைமையாகக் கொண்ட தமிழ் சேனல்.

தமிழ் தொகுப்பாளினிகளைப் பார்த்து போரடித்துப் போனவர்களை உற்சாகப்படுத்தும் முயற்சியாம் இது. சேனலின் லோகோவை மங்களகரமாக மாற்றிய அந்த சேனல் ஆண்களின் ஆடையைப் பெயராகக் கொண்டு ஒரு கேம் ஷோவை ஒளிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சியில்தான் களமிறங்கியுள்ளார் புதிய தொகுப்பாளினி.

இவர் நட்சத்திர சேனலின் தொகுப்பாளினி போல அக்கட தேசத்தில் பிரபலமானவராம். மலையாள தேசத்து மங்கையான இவர் மலையாள படங்களில் தலைகாட்டியுள்ளாராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளும் அத்துபடியாம் இந்த தொகுப்பாளினிக்கு.

என்ன திறமை இருந்தாலும் மக்கள் ரசிச்சு டி.ஆர்.பியில வந்தாதானே அந்த நிகழ்ச்சி நீடிக்கும் என்கின்றனர் டிவி ரசிகர்கள்.

விலகியதன் மர்மம் என்ன தெரியுமா?

பிரபலமான சீரியல்களில் இப்போதெல்லாம் இவருக்கு பதில் இவர் என்று போடுவது வாடிக்கையாகிவிட்டது. பிரபல சேனல்களான சூரிய தொலைக்காட்சியில் ஹீரோயினாக நடித்து வந்த சேது நடிகை திடீரென விலகினார். அவருக்கு பதில் இப்போது பிரபல இசையமைப்பாளரின் மருமகள் நடித்து வருகிறார். சேது நடிகை விலகக் காரணம் அவர் கர்ப்பம் ஆனதுதான் காரணம் என்கின்றனர்.

அதேபோல திருமணத்திற்குப் பின்னர் மும்பையில் செட்டில் ஆன மெட்டி ஒலி நடிகை தற்போது பாடகரின் மகனுடன் சீரியலில் ஜோடி சேர்ந்தார். அவரும் இப்போது கர்ப்பமாக இருப்பதால் விரைவில் அவருக்குப் பதில் இவர் என்று கார்டு போடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X