Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரு காமெடியின் காதல் கதை!
கோலிவுட்டின் காமெடிப் புயல் வடிவேலுவையும், கலக்கல் புயல் கோவை சரளாவையும் இணைத்து மீண்டும் படு ஸ்டிராங்காக செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.
சினிமாவில் நீண்ட நாளாக ஸ்டெடியான மார்க்கெட்டுடன் கலக்கி வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய நடிகைகளில் கோவை சரளாவும் ஒருவர். கிட்டத்தட்ட மனோரமாவுக்குப் பிறகு காமெடியில் கலகலக்க வைத்த நடிகை கோவை சரளா மட்டுமே.முதலில் எஸ்.எஸ்.சந்திரனுடன் வெளுத்துக் கட்டினார். பிறகு கவுண்டமணியுடன் கலாய்த்தார். பின்னர் அவரது சைடு செந்திலுடன் சிலம்பினார். பிறகு சார்லி என அனைத்து காமெடி நடிகர்களுடனும் இணைந்து கலக்கியவர் சரளா.
ஆனால் வைகைப் புயல் வடிவேலுவுடன் ஜோடி போட ஆரம்பித்த பிறகுதான் கோவை சரளாவின் முழு வீச்சும் வெளிப்பட்டது. இப்படியும் கூட ஒரு நடிகையால் கலக்க முடியுமா என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வெளுத்துக் கட்டினார் கோவை சரளா.
வடிவேலுவுடன் சரளா இணைந்து நடிக்க ஆரம்பித்த பிறகு அவர்களை இணைத்து சரமாரியாக வதந்திகள் கிளம்பின. இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள், நெருங்கிப் பழகுகிறார்கள், காதல் மலர்ந்து பூத்துக் குலுங்குகிறது என்று செய்திகள் கிளம்பின.
ஆனால் இந்த வதந்திகளை இருவருமே மறுக்கவில்லை. பின்னர் இருவருக்கும் லடாய் என்று செய்தி வந்தது. அதற்கேற்ப இருவரும் சமீப காலமாக இணைந்து நடிக்கவில்லை.
மேலும் தமிழில் கோவை சரளா படங்களைக் குறைத்துக் கொண்டு விட்டார். ஆனால் தெலுஙகில் படு பிசியாக உள்ளார். நிறையப் படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கிலேயே செட்டிலாகி விட்ட சரளா எப்போதாவதுதான் சென்னைக்கு வருகிறார். இந்த நிலையில் கோவை சரளாவையும், வடிவேலுவையும் இணைத்து புதிய வதந்திகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
வடிவேலு அடிக்கடி ஹைதராபாத் போகிறார், சரளாவை சந்திக்கிறார். இருவரும் ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் தங்குகின்றனர், ஒட்டிக்கிட்டு ஊர் சுற்றுகிறார்கள் என்று அந்த செய்திகள் கூறுகின்றன.
இந்த வதந்திகளையும் இருவரும் மறுக்கவில்லை. மாறாக கோவை சரளாவிடம் தெலுங்கு பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது மர்மப் புன்னகையை மட்டும் சிந்தி வைத்தாராம்.
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது!