Just In
- 2 min ago
யஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?
- 11 min ago
இப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சந்தோஷமாக வீடியோ போட்ட ரியோ.. என்ன சொல்றாருன்னு பாருங்க!
- 18 min ago
நீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்!
- 24 min ago
பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்.. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Don't Miss!
- Automobiles
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
- News
சல்லிசல்லியான அதிமுக பிளான்.. மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சென்னை.. சசிகலா மீது குவிந்த கவனம்!
- Sports
சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோடைக்கு மோர் கொடுத்த ரஜினி!

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில், ரஜினிகாந்துக்கு சொந்தமான பெரிய தோட்டம் உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ரஜினி, இங்குதான் ஓய்வு எடுக்கிறார்.
எந்திரன் படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்து, கேளம்பாக்கம் பண்ணை வீட்டில், ரஜினி ஓய்வு எடுத்து வருகிறார். அப்போது, தோட்டத்தில் கொளுத்தும் வெயிலில் தொழிலாளர்கள் வேலை செய்வதைக் கண்டார்.
இதையடுத்து, பகல் நேரத்தில் தொழிலாளர்களுக்கு மோர் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தன் தொழிலாளர்களுடன் நின்றுவிடாமல், தோட்டத்தின் அருகில் உள்ள சாலையில் செல்லும் பொது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பிய ரஜினி, அதற்காக பெரிய பந்தல் அமைத்து கோடைகாலம் முடியும் வரை தினசரி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தோட்டத்துக்கு வெளியே நேற்று பந்தல் அமைக்கப்பட்டது. பெரிய அண்டாவில் மோர் வைக்கப்பட்டிருந்தது. கேளம்பாக்கத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரஜினி, நேற்று காலை 10 மணிக்கு, அந்த வழியாக சென்ற பொது மக்களுக்கு தன் கையாலேயே மோர் வழங்கி மகிழந்துள்ளார். இதை கேள்விபட்டதும் அப்பகுதியில் மக்கள் கூட்டமாக திரண்டு வந்துவிட்டனராம்.
ஏற்கெனவே, ராகவேந்திரா கல்யாண மண்டபம் வளாகத்தையொட்டி பெரும் பந்தல் அமைத்து இலவச மோர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் கூட இதேபோல வழங்கப்பட்டது.