ஆபரேஷன் பண்ணியிருக்காவிட்டால் கோமாவில் விழுந்திருப்பேன்- சல்மான்
கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இருந்திருந்தேன் என்றால் இந்நேரம் கோமாவில் விழுந்திருப்பேன் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் சல்மான் கானுக்கு நரம்பு கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. அவர் டிரைஜெமினல் நியூரால்ஜியா என்னும் நரம்புப் பிரச்சனையால் கடந்த 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் வலி அதிகரிக்கவே உடனே அறுவை சிகிச்சை செய்து கொண்டார் சல்மான். இது அனைவரும் அறிந்த செய்தி. தெரியாத விஷயம் என்னவென்றால் அவர் மட்டும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்நேரம் கோமாவில் விழுந்திருப்பார் என்பது தான்.
இது குறித்து சல்மான் கூறுகையில்,
நான் 60 சதவீதம் குணமடைந்துள்ளேன். இந்த கோளாறை முழுமையாக குணப்படுத்த முடியாது. நான் மட்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தியிருந்தால் இந்நேரம் கோமாவில் விழுந்திருப்பேன் என்றார்.
சல்மானை பயணம் செய்யக்கூடாது, நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சல்மான் ஏக் தா டைகர் படப்பிடிப்புக்காக பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
அவருக்கு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











