Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கார்த்திக்குக்கு பிறந்த ஞானோதயம்!
ஒருவரை உசுப்பி விட்டு ஊறுகாய் போடத் துடிப்போர் தமிழகத்தில் அதிகம். அவர் பாட்டுக்கு நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை உசுப்பி விட்டு அரசியலில் புகுத்தி போண்டியாக்கி அசிங்கப்படுத்தினர்.
அதே போல கொஞ்ச வருஷத்திற்கு முன்பு ரஜினியையும் அரசியலுக்குக் கூட்டி வந்து தாங்கள் குளிர் காய துடித்தது ஒரு கும்பல். இதற்கு அதிபுத்திசாலியாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கையாளரின் தூண்டுதல் வேறு.
ஆனால் கமல் போன்ற நண்பர்களின் அட்வைஸைக் கேட்டு ரஜினி உஷாராகி தப்பி விட்டார். அந்த அதிபுத்திசாலியிடமிருந்தும் ஒதுங்கிவிட்டார்.
இன்னும் ரஜினியை எப்படியாவது தூக்கிக் கொண்டு வந்து விட வேண்டும் என அலைபாய்ந்தபடிதான் உள்ளது அந்தக் கும்பல். இருப்பினும் ரஜினி இன்னும் கூட உஷாராகத்தான் இருப்பதாக தெரிகிறது.
ஆனால் சிவாஜியை விட மிக மோசமான முறையில் பந்தாடப்பட்டவர் கார்த்திக். சரணாலயம் என்ற அமைப்பைத் தொடங்கியபோது அதற்கு வந்த கூட்டத்தைப் பார்த்து அண்ணே, அடுத்த முதல்வர் நீங்கதான் என்று சிலர் தூபம் போட குளிர்ந்து போய் என்ன ஏது என்று, ஆழம் கூட பார்க்காமல் அரசியல் கடலில் குதித்து விட்டார் கார்த்திக்.
ஆனால் அங்கு அலைந்து திரிந்த சுறாக்களையும், திமிங்கலங்களையும் பார்த்து பயந்து பீதியாகி இப்போது கரை ஒதுங்கி கமுக்கமாக இருக்கிறார்.
பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து துரத்தப்பட்டு, புதுக் கட்சியும் தொடங்கி விட்ட கார்த்திக் இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை.
இடையில் விருதுநகரில் போட்டியிட்டு மானம் போனதுதான் மிச்சம். இப்போது உருப்படியான வேலையில் சத்தம் போடாமல் இறங்கியுள்ளார் கார்த்திக். அது அமைதியாக நடிப்பைக் கவனிப்பது.
மணிரத்தினத்தின் ராவண் படத்தில் அசத்தலான கேரக்டர் செய்துள்ளாராம் கார்த்திக். அடுத்து மாஞ்சா வேலு என்ற படத்தில் கேரக்டர் ரோல் செய்கிறார். அதாவது ஹீரோவுக்கு அண்ணனாக வருகிறார் இப்படத்தில்.
முதலி்ல் பிரபுதான் இந்த ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் பிரபுதான், கார்த்திக்கைப் பார்த்துப் பேசி, பேசாமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்க, அதுதான் உங்களுக்கு நல்லது என்று அட்வைஸ் கூறி இந்த ரோலில் நடிக்க சிபாரிசு செய்தாராம்.
பிரபு சொன்னதில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்ட கார்த்திக்கும், படு உற்சாகமாக இந்தப் படத்தில் நடித்து வருகிறாராம்.
யூனிட்டோட்டு படு நட்பாக பழகி வரும் கார்த்திக், தனது காட்சிகள் முடிந்தாலும் கூட கிளம்பிப் போகாமல் அங்கேயே இருந்து மற்றவர்கள் நடிப்பைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாராம்.
படு உற்சாகமாக நடித்து வரும் கார்த்திக்கால் அந்த யூனிட்டே சந்தோஷமாக காணப்படுகிறதாம்.
இந்த மாற்றம் குறித்து கார்த்திக் கூறுகையில், 5 வருடங்களாக நடிக்காமல் இருந்தேன். திடீரென ஒரு நாள் மணிரத்னம் அழைத்து "ராவணன்' படத்தில் நடிக்க வேண்டும் என்றார். அவருடைய அன்புக்காக நடித்தேன்.
அந்தப் படம் முடிந்தவுடன் மாஞ்சா வேலு படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. இதில் எனக்கு முக்கியமான கேரக்டர். அருண் விஜய்க்கு அண்ணனாக ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்தாலும் ஷூட்டிங்கின்போது என் மீது அனைவரும் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. வீட்டுக்குச் செல்லக் கூட மனம் இல்லை.
இவ்வளவு அன்பை இத்தனை நாளாக 'மிஸ்' பண்ணிவிட்டோமே என்ற வருத்தம் ஏற்பட்டது. எப்படி? ஏன்? இந்த இடைவெளி ஏற்பட்டது என எனக்கே தெரியவில்லை.
நான் நடித்தபோது இருந்ததை விட இப்போது தொழில்நுட்பம் பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. மணிரத்னம் மூலம் மீண்டும் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை
புத்துணர்ச்சியுடன் தொடங்கியிருக்கிறேன்.
இனி பழைய கார்த்திக்கை பார்க்க முடியாது. இப்போது நான் புதுமுகம். இப்போது ஃபீல்டில் உள்ளவர்களுக்கு ஏற்ப
இன்னும் என்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்.
அருண் விஜய்யை நிஜ வாழ்க்கையிலும் தம்பியாக
ஏற்றுக்கொண்டிருப்பதால் ஷூட்டிங்கில் மிக யதார்த்தமாக நடிக்க முடிகிறது.
நான் மீண்டும் நடிக்க வருவதற்கு என் நண்பரும்
நடிகருமான பிரபுதான் முக்கியக் காரணம். மாஞ்சா வேலு படத்தில் பிரபுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில்
நடிக்கிறார் என்றார்.
ரூட்டைப் புடி என்று ஒரு படத்தில் கார்த்திக் பாட்டுப் பாடி நடித்திருப்பார். ஆனால் அவரே இப்போதுதான் சரியான ரூட்டைப் பிடித்துள்ளார்.
அப்படியே திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருந்தால் ஒரு நல்ல நடிகரை தக்க வைத்துக் கொண்ட பெருமை சினிமாவுக்குக் கிடைக்கும்.