Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
குசேலனில் குழப்பமா?
மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன கத பறயும் போள் படத்தை தமிழில் ரஜினிகாந்த், பசுபதியை வைத்து பி.வாசு ரீமேக் செய்யவுள்ளார். குசேலன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயனதாரா, ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஒரிஜினல் படத்தின் கதைப்படி சீனிவாசன்தான் ஹீரோ. மம்முட்டிக்கு மொத்தமே படத்தில் 9 சீன்கள்தான். சீனிவாசனுக்குத்தான் கதையில் முக்கியத்துவம் அதிகம். படம் தொடங்கி அரை மணி நேரத்திற்கு மம்முட்டி கேரக்டரே வராது. பிறகுதான் அவர் வருவார்.
ஆனால் தமிழில் அப்படி எடுக்க முடியாதே. எனவே ரஜினியின் கேரக்டரை ஹீரோவாக்கி விட்டார் பி.வாசு. பசுபதியை 2வது நாயகனாக்கியுள்ளார். ரஜினியின் கேரக்டர் படம் முழுக்க வருவது போல திரைக்கதையை மாற்றவுள்ளார் பி.வாசு.
மேலும், வழக்கமான ரஜினியின் அறிமுகப் பாடல் தவிர வேறு சில பாடல்களும் ரஜினிக்காக உருவாக்கப்படவுள்ளது. இதுதவிர தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்று ஆடும் கலக்கல் பாடலும் வாசுவின் திட்டத்தில் உள்ளது.
ஆனால் இதில் ரஜினிக்கு உடன்பாடில்லையாம். அதாவது, சீனிவாசன் எடுத்த கதையை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் எடுக்க வேண்டும் என ரஜினி விரும்புகிறாராம். தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் அவர் அபிப்பிராயப்படுகிறாராம்.
ஆனால் பி.வாசு இதற்கு உடன்படவில்லையாம். படம் முழுக்க நீங்கள் வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மற்றொரு வள்ளி ஆக படம் மாறி விடும் எனவும் ரஜினியிடம் வாசு கூறியுள்ளாராம்.
இப்படி இருவருக்கும் கருத்த வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் தான் படத் தொடக்கம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வாசுவிடம் கேட்டபோது, முதலில் சிரித்தார். பின்னர், தமிழ் பதிப்பின் திரைக்கதை குறித்து முதலில் ரஜினி சாருக்கு சில சந்தேகங்கள் இருந்தது. ஆனால் நான் அவற்றை விளக்கி அவரது சந்தேகங்களைப் போக்கினேன்.
மறுபடியம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க ரஜினி படமாகவே இருக்கும். முத்து, சந்திரமுகி போல இதுவும் பக்கா ரஜினி படமாகவே இருக்கும்.
ரஜினி, விவேக் பங்கேற்கும் காமெடிக் காட்சிகள் வயிற்றைப் பதமாக்கப் போவது நிச்சயம். ரஜினியின் ஒப்புதலுடன் மேலும் பல புதிய விஷயங்களும் படத்தில் இடம் பெறும். விரைவில் படத் தொடக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார் வாசு.