Don't Miss!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்கிறீயா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லாரன்சுக்கு சமூக சேவகர் விருது... முதல்வர் வழங்குகிறார்!
வருகிற சனிக்கிழமை சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு, பல்வேறு சாதனையாளர்களுக்கான விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.
கல்பனா சாவ்லா சாதனை விருதை ராஜமகேஸ்வரி, புஷ்பாஞ்சலி, ராஜலெட்சுமி ஆகியோர் பெறுகிறார்கள். சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கான விருது காஞ்சீபுரம் மனோகரன், கே.கே.நகர் ஜெயக்குமார், திருச்சி பாண்டி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கான விருதை நடிகர் லாரன்சுக்கு முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.
திருவான்மியூர் பிரசாத், நெல்லை சங்கர் ராமன், பழவந்தாங்கல் சேதுகுமாரி ஆகியோரும் சிறந்த நிறுவனம் மற்றும் சமூக சேவைக்கான விருதுகளை பெறுகிறார்கள்.
விருது ஏன்?
கடந்த 3 வருடங்களாக ஆதரவற்றோருக்கும் ஊனமுற்றோருக்கும் அறக்கட்டளை துவங்கி உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ். அசோக்நகரில் உள்ள தனது வீட்டில் 60 ஆதரவற்ற குழந்தைகளை தங்க வைத்து அவர்களது படிப்புச் செலவுகள் அனைத்தையும் கவனித்து வருகிறார்.
ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் குழந்தைகளின் உணவுச் செலவினைக் கவனித்துக் கொள்கிறார்கள். இது தவிர ஏழைக் குழந்தைகளுக்கான மருத்துவ செலவுகளையும் அவர் கவனித்துக் கொள்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னைப் போன்றவர்களுக்கு இந்த விருது பெரும் உற்சாகம் தருகிறது.
இப்போது சாலிகிராமத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மாத வாடகைக்கு வீடு எடுத்து 30 ஆதரவற்ற குழந்தைகளை தங்க வைத்துள்ளேன்.
ஊனமுற்றோருக்கு நடனப் பயிற்சி அளித்து நடன குழு ஒன்றையும் துவக்கியுள்ளேன். அவர்களை வைத்து நடத்துகிற நடன நிகழ்ச்சி மூலம் வரும் தொகையில் 12 பேர் பெயர்களில் தலா ரூ.25 ஆயிரத்தை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக போட்டுள்ளேன். இன்னும் நிறைய செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.