Don't Miss!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்பத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி 'பேசும்' ரஜினி!
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் தனக்காக டப்பிங் பேசப் போகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
அது, அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் 'ராணா' படத்துக்காக. இந்தப் படம் தமிழ் - இந்தியில் நேரடியாகவே வெளியாவதால், இந்திப் பதிப்புக்கும் ரஜினியே குரல் தர சம்மதித்துள்ளாராம்.
பொதுவாகவே தன் படமேயானாலும், அது வேறு மொழிக்கு டப் செய்யப்படும்போது, குரல் தருவதில்லை என்று ஒரு கொள்கை வைத்திருக்கிறார் ரஜினி.
அவர் நடிப்பில் தமிழில் வெளியான அனைத்துப் படங்களுமே தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் எந்தப் படத்துக்கும் ரஜினி சொந்தக் குரலில் பேசியதில்லை.
அதேநேரம், அவர் நேரடியாக நடிக்கும் தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் மட்டும் சொந்தக் குரல் கொடுப்பார் (கதாநாயகுடு விதிவிலக்கு).
ரஜினி நடித்து வெளியான கடைசி இந்திப் படம் புலந்தி (நாட்டாமை). இதில் அவர் சிறப்புத் தோற்றத்தில் வந்திருப்பார். அவரது கேரக்டருக்கு அவர்தான் டப்பிங்கும் பேசினார்.
அதன் பிறகு வேறு இந்திப்படங்களில் நடிக்கவில்லை ரஜினி. சந்திரமுகி, சிவாஜி மற்றும் எந்திரன் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டன. ஆனால் இவற்றில் ரஜினிக்கு வேறு ஒருவரை வைத்தே குரல் கொடுத்தனர்.
இப்போது ராணா நேரடி இந்தி - தமிழ் படமாக வெளியாகும் நிலையில், அதில் தனது வேடங்களுக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேச ரஜினி முடிவு செய்துள்ளார்.
ரஜினியின் அதிவேக இந்தி உச்சரிப்புக்கு வடக்கில் தனி ரசிகர் கூட்டமே உண்டு. அவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது, ராணா மூலம்!