Just In
- 8 min ago
இப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சந்தோஷமாக வீடியோ போட்ட ரியோ.. என்ன சொல்றாருன்னு பாருங்க!
- 15 min ago
நீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்!
- 21 min ago
பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்.. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
- 35 min ago
இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர்.. நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு கமல் அஞ்சலி
Don't Miss!
- Automobiles
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
- News
சல்லிசல்லியான அதிமுக பிளான்.. மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சென்னை.. சசிகலா மீது குவிந்த கவனம்!
- Sports
சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உஷாரான ஆமிர் கான்!

சிவசேனா மற்றும் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா ஆகியவற்றுக்கு இடையில் சிக்கி பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள். ஆரம்பத்திலிருந்து மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா அமிதாப்பைக் குறி வைத்து கடுமையாக தாக்கி வருகிறது.
பதிலுக்கு ஷாருக் கானை டெல்லிக்காரருக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டு சிவசேனா வம்பிழுத்து வருகிறது.
இந் நிலையில், கான் வரிசை நடிகர்களில் முக்கியமானவரான ஆமிர்கான், தானாக முன்வந்து நான் மராத்திக்காரன் என கூறியுள்ளார். நான் மகாராஷ்டிராவில் பிறந்தவன், வளர்ந்தவன். எனவே நானும் மராட்டி தான் என்று கூறியிருக்கிறார் ஆமிர்கான்.
அவருடைய லகான் படத்தை மராத்திக்காரரன அசுதோஷ் கோவரிகர் இயக்கினார். தாரே ஜமீன் பர் படத்தின் கதையை எழுதியவர் அமோல் குப்தே. இவரும் மராட்டியர் தான். இதை ராசியாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆமிர் பதிலளிக்கையில், நான் மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவன். நானும் மராத்திதான். எனவே அதை பெருமையாகவே நினைக்கிறேன் என்றார் ஆமிர்.
தொடர்ந்து அவர் கூறுகையில், மொழி ஒரு பிரச்சினை இல்லை. நாம் ஒரே நாட்டில்தான் வாழ்கிறோம். நமது நாட்டில் பல கலாச்சாரங்கள், மொழிகள் உள்ளன. ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மொழியையும் நாம் மதிக்க வேண்டும். திரைப்படங்கள் இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்றார்.
மேலும், நாம் அரசியல்வாதிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். ஒரு தொலைவிலேயே இருக்க வேண்டும் என எனது நண்பர்களிடம் நான் கூறுவதுண்டு. அவர்கள் மொழியால், மதத்தால், ஜாதியால் மற்றவர்களைப் பிரித்து விடுவார்கள். முன்னேற்றத்துக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபடும் தலைவர்களைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும் என்றார் ஆமிர்.
ஆமிர் ரொம்பத் தெளிவாகவும், உஷாராகவும் இருக்கிறார்.