Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐபிஎல் அணியை வாங்கும் சல்மான் கான்
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் துவக்கப்பட்ட ஐபிஎல் அமைப்பு வசூலில் கிரிக்கெட் உலகை புரட்டி போட்டது. இதில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஷாருக் கானும், கிங் லெவன் பஞ்சாப் அணியை ப்ரீத்தி ஜிந்தாவும் வாங்கியுள்ளனர்.
இவர்களை அடுத்து பல சினிமா நட்சத்திரங்களுக்கும் ஐபிஎல் அணியை வாங்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீசன் 4ன் போது அணிகளின் எண்ணிக்கை மேலும் இரண்டாக அதிகரிக்கும் என ஐபிஎல் அமைப்பும் தெரிவித்திருப்பதால் இவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள துடித்து வருகின்றனர்.
இவர்களில் முதல் ஆளாக மும்பையில் ஐபிஎல் தலைவர் லலித் மோடியை சென்று சந்தித்துள்ளா சல்மான் கான்.
இந்த சந்திப்பு குறித்து லலித் மோடி கூறுகையில்,
சல்மான் ஐபிஎல் அணியை வாங்கும் முடிவில் உறுதியாக உள்ளார். அதற்காக செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து கேட்டு அவர் என்னிடம் அறிந்து கொண்டார்.
புதிய அணிகளுக்கான டெண்டர் வரும் டிசம்பரில் அறிவிக்கப்படும். இதற்கான ஏலம் ஜனவரி 2010ல் நடக்கும். இதில் அதிகபட்ச தொகைக்கு கேட்பவர்களுக்கு அணி கொடுக்கப்படும். ஏலத் தொகையை அடிப்படையாக வைத்து அந்த அணிக்கு ஆமதாபாத், நாக்பூர், விசாகப்பட்டிணம் போன்ற பெயர்கள் வைக்கப்படும் என்றார்.