Don't Miss!
- News
திருமாவளவனின் "மெகா அஸ்திரம்".. "மோடி என்கிற கேள்வி" என்ற பெயரில் தமிழில் பிபிசி ஆவணப்படம் வெளியீடு
- Sports
இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாக். முடிவே எடுக்காமல் திரும்பி வந்த ஜெய்ஷா.. என்ன நடந்தது
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குதிரைகளுக்கும் எனக்குமான காதல்... காஷ்மோரா முதல் பொன்னியின் செல்வன் வரை... பகிர்ந்த கார்த்தி!
சென்னை : நடிகர் கார்த்தி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, சர்தார் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான் பண்ண தப்ப.. நீங்க பண்ணிராதிங்க.. மேடையில் ஓப்பனாக பேசிய கார்த்தி!

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். படத்திற்கு படம் வித்தியாசமான கார்த்தியை பார்க்க முடிகிறது. திடீரென கல்லூரி மாணவனாக நடிக்கும் அவர், அடுத்த படத்திலேயே வீரமான போலீஸ் அதிகாரியாக தோன்றுகிறார். திடீரென 5 சகோதரிகளுக்கு பாசமான தம்பியாக நடித்து பட்டையை கிளப்புகிறார்.

சிறப்பான கதைத்தேர்வு
தன்னுடைய கதைகளை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தனக்கென சிறப்பான ரசிகர்களை கொண்டுள்ளார் கார்த்தி. இவரது பையா, கொம்பன், சுல்தான் படங்கள் இவருக்கு மிகுந்த ஏற்றத்தை கொடுத்தவை. இந்த மூன்று படங்களும் ஏப்ரல் 2ம் தேதி ரிலீசானவை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இதுகுறித்து அவர் பகிர்ந்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி
தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் என்ற சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ள இந்தப் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இந்தக் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குதிரையுடன் கார்த்தி
இந்நிலையில் இன்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் குதிரையுடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டுள்ள கார்த்தி குதிரையுடன் தனக்கு இருக்கும் காதல் மிகவும் அலாதியானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காஷ்மோரா படத்தில் தான் குதிரையேற்றத்தை கற்றதாகவும் தற்போது அது பொன்னியின் செல்வன் படத்தில் காதலுடன் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாது
இந்த சந்தோஷத்தை தன்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கார்த்தி, குதிரை தன்னுடன் சேர்ந்து பயணித்ததையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாகவும் ப்ரெஷ்ஷாகவும் காணப்படுகிறார்.