Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'பாவாட' பணத்தை மிச்சப்படுத்தி சென்னைக்கு உதவிய பிருத்விராஜ்
திருவனந்தபுரம்: தனது நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாவாட' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஒதுக்கிய பணத்தை மிச்சப்படுத்தி அதனை சென்னை மக்களுக்கு அளித்திருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல்வேறு நடிக, நடிகையரும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாப் பணத்தை மிச்சப்படுத்தி சென்னை நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்.
ஒரு இசை வெளியீட்டு விழா எனில் சுமார் 250 - 300 நபர்கள் வரை கலந்து கொள்வர். மேலும் கலந்து கொள்பவர்களுக்கு படக்குழுவினர் விருந்து அளித்து உபசாரம் செய்வர்.
இந்நிலையில் தனது படத்திற்கு நெருக்கமான வெறும் 25 பேரை அழைத்து தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக எளிமையாக நடத்தியிருக்கிறார் பிருத்விராஜ்.
இதற்கு படக்குழுவினரும் ஒத்துழைப்பு அளித்திருக்கின்றனர். தனக்கு நெருக்கமான சென்னை நகரம் துயரத்தில் இருக்கும்போது தனது இசை வெளியீட்டு விழாவை ஆடம்பரமாக நடத்த பிருத்விராஜ் விரும்பவில்லை.
தற்போது இந்த இசை வெளியீட்டு விழாவின் மூலம் மிச்சமான ரூ 1 லட்சத்தை சென்னை நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறது பிருத்விராஜ் அண்ட் கோ.