Don't Miss!
- Finance T+0 Settlement என்றால் என்ன? 25 நிறுவனங்கள் மட்டுமே தேர்வு.. முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்..?
- News முறியடிக்கணும்.. வீடு வீடாக போங்க.. விடாதீங்க! சின்னம் மாறும் மதிமுக, விசிக.. திமுக மாஸ்டர்பிளான்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Technology பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினிக்கு டயாலிசிஸ்
அவருக்கான சிகிச்சை முறைகள் குறித்து ரஜினியுடன் சென்றுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், எலிசபெத் மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை காலை சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டார் ரஜினிகாந்த். அவர் சிங்கப்பூர் சிறுநீரக கழக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அவர் ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு ரஜினிக்கு மீண்டும் டயாலிசிஸ் தரப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகள் தொடங்கியுள்ளன. அவருக்கு மேற்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ரஜினிகாந்த் சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பரவியதும் சிங்கப்பூரில் வசிக்கும் ரஜினியின் ரசிகர்கள் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனை முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரஜினி குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று, ரஜினிக்கான சிகிச்சைகள் குறித்த விவரங்களை மெளன்ட் எலிசபெத் மருத்துவமனை வெளியிடவில்லை.