Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விருந்தில் ரகளை செய்ததாக ராம்சரண் மீது புகார்.. போலீஸ் விசாரணை
ஹைதராபாத்: விடிய விடிய விருந்து வைத்து கலாட்ட செய்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான ராம் சரண் மீது பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் அளித்துள்ளனர்.
நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் வீடு ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு நண்பர்களுக்கு அவர் 'சனிக்கிழமை விருந்து' கொடுத்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சி வீட்டு மொட்டை மாடியில் நடந்தது. ஸ்ரீகாந்த் ரெட்டி மற்றும் நடிகர், நடிகைகள், நண்பர்கள் கலந்து கொண்டனர். விடிய விடிய இந்த மது விருந்து நடந்தது. அப்போது ஒரே கூச்சலாக இருந்தது. இது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஒலி பெருக்கியில் சத்தமாக பாட்டுப் போட்டு ஆடியுள்ளனர்.
அதிகாலை 4 மணி வரை இந்த விருந்து களியாட்டங்கள் நடந்தன. இதனால் அக்கம் பக்கத்தினர் தூக்கமிழந்து தவித்தனர்.
உடனே போலீசில் புகார் தெரிவித்தனர்.
ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் விரைந்து வந்து ராம்சரணிடம் விசாரித்தனர். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.