ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய விஷால்… வாழ்த்திய ரசிகர்கள் !
சென்னை : நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை ஆதரவற்ற முதியவர்களுடன் கொண்டாடினார்.
மேலும் சுரபி இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி, குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தியதோடு குழந்தைகளுக்கு அவர் உணவு ஊட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் விஷாலின் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிரபல தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி அவர்களின் மகன் விஷால் இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நெருங்கிய நண்பர்கள என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று அதிகாலை முதலே விஷாலின் பிறந்தநாள் குறித்து ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில்
இந்த நிலையில் விஷால் இன்று தனது பிறந்தநாளின் போது மெர்சி ஹோமில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு தனது கையால் உணவு வழங்கினார். மேலும் சுரபி இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். மேலும் அந்த குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியதோடு குழந்தைகளுக்கு அவர் உணவு ஊட்டினார். இந்த நிகழ்ச்சியில் விஷாலின் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளில் விஷால் செய்த இந்த சிறப்பான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஏராளமானோருக்கு உதவி
தமிழின் முன்னணி நடிகரான விஷால் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து நிஜத்திலும் ஹீரோ என்பதை நிரூபித்து வருகிறார். கொரோனா ஊரடங்கிலேயே சென்னை முழுக்க வீதிகளில் வசிப்பவர்களுக்கு தினமும் உணவு வழங்கி பேருதவி செய்தார்.

வீரமே வாகை சூடும்
விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு விஷால்31 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இப்படத்திற்கு 'வீரமே வாகை சூடும்'என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் கட்டையுடன் ஆக்ரோஷமாக நிற்கிறார் விஷால் . இணையத்தில் வெளியாகி உள்ள இந்த போஸ்டர் வைரலாகி உள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசை
அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

துப்பறிவாளன்2
விஷால் நடித்து மிகவும் ஹிட்டடித்த துப்பறிவாளன் படத்தை மிஷ்கின் இயக்கினார். துப்பாறிவாளன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் மற்றும் விஷால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மிஷ்கின் இப்படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.மேலும், ஆர்யா விஷால் நடித்த எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











