Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாலா படத்திற்காக மீண்டும் வாரணம் ஆயிரம் கேரக்டராக மாறும் சூர்யா
சென்னை : பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படம் 2001 ல் வெளியாகி சூர்யாவிற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. அதுவரை சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்து வந்த சூர்யாவை, ஆக்ஷன் ஹீரோவாக காட்டிய படம் நந்தா தான்.
அதைத் தொடர்ந்து 2003 ல் மீண்டும் பாலா இயக்கிய பிதாமகன் படம், சூர்யாவின் காமெடி முகத்தை உலகிற்கு அடையாளம் காட்டியது. விக்ரம், சூர்யா ஆகியோருக்கு நடிப்பில் மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் பிதாமகன்.
சூர்யா சார் சாரி கேக்குறாரேனு மேக்கப் மேன் அழுதுட்டார்! சூரரைப்போற்று சம்பவத்தை பகிர்ந்த எழுத்தாளர்!
மீண்டும் சூர்யா – பாலா
இந்நிலையில் மீண்டும் சூர்யா, பாலா இணையும் படம் உருவாக உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. அதற்கு பதிலாக சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் பாலா இயக்கும் படத்தை தயாரிக்க போவதாக கூறப்பட்டது.
விலகிய அதர்வா
பல ஆண்டுகளுக்கு பின் சூர்யா - பாலா இணையும் இந்த படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்க உள்ளதாகவும். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. சூர்யா, கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதர்வா ஏற்கனவே நடித்து வரும் படங்களின் தேதியுடன் ஒத்துவராததால் அவரால் நடிக்க முடியவில்லையாம்.
இரட்டை வேடத்தில் சூர்யா
அதனால் சூர்யாவையே ஹீரோவாக நடிக்க வைக்க பாலா முடிவு செய்து விட்டாராம். தந்தை - மகன் என இரண்டு ரோல்களிலும் சூர்யாவே நடிக்க போகிறாராம். இதற்கு முன் 2008 ல் கெளதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் தந்தை - மகன் ரோலில் நடித்திருந்தார் சூர்யா.
தந்தை – மகன் கேரக்டர்
கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தந்தை - மகன் ரோலில் நடிக்க தயாராகி வருகிறாராம் சூர்யா. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட உள்ளனவாம்.