Just In
- 13 min ago
சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு!
- 1 hr ago
சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்!
- 1 hr ago
சிறுமியுடன் திருமணம்.. லஞ்சம் தந்து போலி ஐடி கார்டு.. சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல பாடகர் கைது!
- 1 hr ago
சிவாஜி ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த காரியம்.. புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்!
Don't Miss!
- Finance
ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!
- Education
வேலை, வேலை, வேலை.! ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை!!
- Lifestyle
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- News
கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா
- Sports
ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Automobiles
மாருதியின் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹீரோ .. ஹீரோ ..
அடுத்த 5 மாதங்களுக்கு படப்பிடிப்புகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு கார் ரேஸ்களுக்காக தீவிரப் பயிற்சியில்ஈடுபட நடிகர் அஜீத் முடிவு செய்துள்ளார்.
நடிக்க வரும் முன் பைக் ரேஸ்களில் பங்கேற்று வந்தவர் அஜீத். நடிக்க வந்த பின்னர் கார் ரேஸ் பயிற்சியில்ஈடுபட்டார். சமீபகாலமாக விமானம் ஓட்டும் பயிற்சியும் எடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் பல கார்பந்தயங்களில் பங்கேற்ற அவர் தொடர் தோல்வியைத் தழுவினார். ஒரு ரேசில் பெரும் விபத்தில் இருந்துதப்பினார்.
இந் நிலையில் நடிப்பை கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு கார் ரேசில் அதிக கவனம் செலுத்த அஜீத் முடிவுசெய்துள்ளார்.
அவர் கூறுகையில்,
சினிமாவில் நடிக்க வரும் முன்பே மோட்டார் பைக் ரேஸ்களில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால், அப்போது நிதிப்பற்றாக்குறை காரணமாக கார் ரேஸ் பயிற்சி எடுக்க முடியாமல் போய்விட்டது. இதனால் நடிக்க வந்து பணம் சேர்த்தபிறகு தான் கார் ரேஸ் பயிற்சியிலேயே இறங்கினேன்.
இனிமேல் அதிக அளவில் ரேஸ்களில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளேன். பி.எம்.டபிள்யூ. ரக கார் ரேஸ்களில்அதிக அளவில் கலந்து கொள்வேன். இதற்காக அடுத்த ஐந்து மாதங்களுக்கு எனது படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு தீவிரப் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன்.
முதல் போட்டி மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில்பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் வழங்கும் பயிற்சியில் ஈடுபட உள்ளேன்.
இந்தியாவின் சார்பில் வர்தன் என்ற கார் ரேஸ் வீரரும் நானும் பங்கேற்கவுள்ளோம். இப்போட்டியில் தைவான்,கொரியா, மலேசியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 பேர் பங்கேற்கவுள்ளனர் என்றார் அஜித்.
பேட்டியின்போது அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியும் உடன் இருந்தார். தன் கணவர் ரேஸ்களில்அதிக ஆர்வம் காட்டுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பி.எம்.டபிள்யூ வழங்கும் பயிற்சியில் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு தலா 35,000 யூரோ டாலர்கள்வழஙகப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.இதனால் அஜீத் முதல் 5 இடத்தில் ஓரிடத்தைப் பிடித்தாலும் பணம் கிடைக்காது.